நாராசம்
நான்கு பூதம்
நாராசம் - இரும்புச் சலாகை
நாராயண ஐயர் சி வி.- தென்னிந்தியாவில் சைவ வரலாறும் அதன் தொடக்கமும் என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதியவர்.
நால் எழுத்து - ஓம் சிவாய,
நால்கோடு - நான்கு கொம்பு.
நால்வகை வாக்கு - பா. வாக்கு.
நால்வர் - சமயக்குரவர் நான்கு பேர். சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மணிவாசகர் சந்தான குரவர் நான்கு பேர். மெய்கண்டார், அருணந்திசிவாசாரியார் மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார்.
நால்வர் சென்ற வழி - தில்லை கோயிலுக்குள் சென்ற வழி. 1) திருஞான சம்பந்தர் தெற்குக் கோபுர வாயில் 2) திருநாவுக்கரசர் - மேற்குக் கோபுர வாயில், 3) சுந்தரமூர்த்தி சுவாமிகள் - வடக்குக் கோபுர வாயில் 4) மணிவாசகர் - கிழக்குக் கோபுர வாயில்.
நாலாய பூதம் - நான்காம் பூதமான வளி,
நாலாம் நிலை - நாற்படிகளில் இறுதி நிலையான ஞானம்.
நாலு திசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் 4 திசைகள்
நாலுபாத சைவம் - 16 சைவத்துள் ஒன்று.சரியை, கிரியை,யோகங்களில் ஆன்மா வீடு பெறும் என்று கூறுவது.
நாளம் - தண்டு, குழாய்.
நான் 27 - அசுவதி முதலியவை.
நானார் - எமன்.
நாவலர் பெருமான் - சுந்தர மூர்த்தி நாயனார் பண்டு ஒரு முதலை உண்ட மைந்தனை வெளிக் கொணர்ந்து உயிர்ப்பித்தார்.
நாற்காலி - நான்கு கால் விலங்கு. ஆடு மாடு. நான்குகால் இருக்கை.
நாற்கோணம் - 4 மூலைகளைக் கொண்ட கோணம் எ-டு பூமி நாற்கோண வடிவம்.
நாற்பகுப்பு - மாயையின் காரியத்தைத் தனு,கரணம்,புவனம், போகம் என நான்காகச் சைவ சித்தாந்தம் குறிப்பிடும்.
நாற்படிகள் - நான்கு பாதங்கள்.
நான் - நான் என்னும் அகங்காரம்
நான்கு சாதனங்கள் - சரியை, கிரியை,யோகம், ஞானம். பயன் பாசநீக்கமும் வீடுபேறும்
நான்கு பதங்கள் - நாற்படிகள் வீடுபேறு அடைய உதவுபவை.
இனம்-சரியை-கிரியை-யோகம்-ஞானம்
1.நெறி-தாசமார்க்கம்-சற்புத்திர மார்க்கம்-சகமார்க்கம்-சன்மார்க்கம்
அடிமை நெறி-மகன்மைநெறி-தோழமை நெறி-நன்னெறி
2.உவமை-அரும்பு-மலர்-காய்-கனி
3.குரவர்-அப்பர்-சம்பந்தர்-சுந்தரர்-மணிவாசகர்
4.தொழில்-புறத்தொழில்-அகமும் புறமும்-அகமும் புறமும்-அறிவு
தொழிற்படல்-தொழிற்படல்-தொழிற்படுதல்
நான்கு பூதம் - மண், புனல், அனல், கால். .