நான்கு பொருள்
நிரனிறை இடம்
நான்கு பொருள் - சிவம், பதி,பசு, பாசம்.
நான்கு பேறு - அறம், பொருள், இன்பம், வீடு.
நான் மலத்தார் - ஆணவம், கன்மம், சுத்த மாயை, திரேதாயி என்னும் நான்கு மலமுடைய பிரளயாகலர்.
நான்மறை - 4.வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். பா. 22 வேதங்கள்.
நான்முகன் கிழத்தி - நாமகள்.
நிகண்டவாதி - சைனரில் ஒரு சாரர்.
நிகமனம் - முடிவு.
நிகழ்ச்சி, நிகழ்தல் - உண்டாதல்
நிகளம் - பந்தம், தளை, கட்டு, எடு நிகளமாம் ஆணவ மூலமலம் அகல (திப4).
நிக்ரகம் - ஒறுத்தல், குறை நிறுத்தல்.
நிக்ரதானம் - தோல்வித்தானம்.
நிசகுண சிவயோகி - சீகண்டர் இயற்றிய பிரமசூத்திர பாடியத்திற்கு உரை எழுதியவர்.
நிட்களம் - கலையற்றது, அருவமானது.
நிட்கள சிவம் - அருவமான சிவம்.
நிட்காமிய வினை - வேள்வி முதலிய வைதீகச் செயல்களில் பயன் கருதிச் செய்யும் செயல். ஞானம் வாயிலாக வீட்டைத் தருவது.
நிட்டை - தியானம். உண்மையறிவு 4இல் ஒன்று. நிட்டை மேவில் கிடைப்பது வீடு, சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றல்.
நித்தம், நித்தலும் - நாள்தோறும்
நித்தப்பொருள் - என்றுமுள்ள பொருள்.
நித்தர் (ன்) - நிலைத்தவர், இறைவன் எ-டு நீடுபல காலங்கள் நித்திரராய் இருந்தும்.
நித்தலும் - நாள்தோறும்
நித்திரை - உறக்கம்.
நித்திய ஆனந்தம் - அழியாத இன்பம்.
நித்தியம் - நித்திய தத்துவம்
நிதியம் - பொருள்.
நிமலன் - தூய வடிவினன்.
நிமித்தம் - ஏதேனும் ஒன்றின் காரணம்.எ-டு நிமித்த காரணம் உலகிற்கு நிமித்த காரணன் கடவுள்.
நியதி - ஒழுங்கு மாயையில் தோன்றுவது. கன்மத்தை உண்டாக்குவது. (சிசிசுப 144) அந் தந்த உயிர் செய்த வினையை அது அதுவே நுகருமாறுவரையறுத்துச் செலுத்தும்.
நியதி தத்துவம் - சுத்த சுத்தா தத்துவத்துள் ஒவ்வோர் ஆன்மாவும் தன் கன்ம பலனை நுகரச் செய்வது.
நியமம் - உறுதி.
நியாயம் - வழக்குரை. மூன்று வகை 1) அனுவாதம் 2) அவ்வளவின் மகிழ்தல் 3) துலாருந்ததி
நிரஞ்சன் - கடவுள்.
நிரதிசய குணம்- மிக மேலாகிய குணம்.
நிரயம் - நரகம்
நிரயத் துன்பம் - நரகவேதனை.
நிரனிறை இடம் - முறைமையாக நிறுத்தப்பட்ட இடம்.