பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு பொருள்

நிரனிறை இடம்


 நான்கு பொருள் - சிவம், பதி,பசு, பாசம்.

நான்கு பேறு - அறம், பொருள், இன்பம், வீடு.

நான் மலத்தார் - ஆணவம், கன்மம், சுத்த மாயை, திரேதாயி என்னும் நான்கு மலமுடைய பிரளயாகலர்.

நான்மறை - 4.வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். பா. 22 வேதங்கள்.

நான்முகன் கிழத்தி - நாமகள்.

நி

நிகண்டவாதி - சைனரில் ஒரு சாரர்.

நிகமனம் - முடிவு.

நிகழ்ச்சி, நிகழ்தல் - உண்டாதல்

நிகளம் - பந்தம், தளை, கட்டு, எடு நிகளமாம் ஆணவ மூலமலம் அகல (திப4).

நிக்ரகம் - ஒறுத்தல், குறை நிறுத்தல்.

நிக்ரதானம் - தோல்வித்தானம்.

நிசகுண சிவயோகி - சீகண்டர் இயற்றிய பிரமசூத்திர பாடியத்திற்கு உரை எழுதியவர்.

நிட்களம் - கலையற்றது, அருவமானது.

நிட்கள சிவம் - அருவமான சிவம்.

நிட்காமிய வினை - வேள்வி முதலிய வைதீகச் செயல்களில் பயன் கருதிச் செய்யும் செயல். ஞானம் வாயிலாக வீட்டைத் தருவது.

நிட்டை - தியானம். உண்மையறிவு 4இல் ஒன்று. நிட்டை மேவில் கிடைப்பது வீடு, சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றல்.

நித்தம், நித்தலும் - நாள்தோறும்

நித்தப்பொருள் - என்றுமுள்ள பொருள்.

நித்தர் (ன்) - நிலைத்தவர், இறைவன் எ-டு நீடுபல காலங்கள் நித்திரராய் இருந்தும்.

நித்தலும் - நாள்தோறும்

நித்திரை - உறக்கம்.

நித்திய ஆனந்தம் - அழியாத இன்பம்.

நித்தியம் - நித்திய தத்துவம்

நிதியம் - பொருள்.

நிமலன் - தூய வடிவினன்.

நிமித்தம் - ஏதேனும் ஒன்றின் காரணம்.எ-டு நிமித்த காரணம் உலகிற்கு நிமித்த காரணன் கடவுள்.

நியதி - ஒழுங்கு மாயையில் தோன்றுவது. கன்மத்தை உண்டாக்குவது. (சிசிசுப 144) அந் தந்த உயிர் செய்த வினையை அது அதுவே நுகருமாறுவரையறுத்துச் செலுத்தும்.

நியதி தத்துவம் - சுத்த சுத்தா தத்துவத்துள் ஒவ்வோர் ஆன்மாவும் தன் கன்ம பலனை நுகரச் செய்வது.

நியமம் - உறுதி.

நியாயம் - வழக்குரை. மூன்று வகை 1) அனுவாதம் 2) அவ்வளவின் மகிழ்தல் 3) துலாருந்ததி

நிரஞ்சன் - கடவுள்.

நிரதிசய குணம்- மிக மேலாகிய குணம்.

நிரயம் - நரகம்

நிரயத் துன்பம் - நரகவேதனை.

நிரனிறை இடம் - முறைமையாக நிறுத்தப்பட்ட இடம்.

169