படியின் மிசை
பத்ததி
படியின்மிசை - நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் திரிந்து.
படுத்தலோசை - மெல்லக் கூறுதல்.
படைப்பு வரலாறு - 1) சுத்த மாயை. இதிலிருந்து வாக்கு 4, சுத்தத்தத்துவம் 7 ஆகியவை தோன்றும். 2) அசுத்த மாயை; இதிலிருந்து அசுத்த தத்துவம் தோன்றும். 3) பிர கிருதிமாயை; இதிலிருந்து ஆன்மதத்துவம் 24 தோன்றும்
பண்- 1) குறிஞ்சி, பாலை, மருதம், செவ்வழி. 2) கதி.
பண்அமர- பண்ணுதல் அமரும் படி எ-டு பண் அமர மாச்செலுத்தும் பாகரினும் (சிபோபா 66)
பண்டாரசாத்திரங்கள் - இவை 14 மெய்யறிவு நூல்கள்.
1)தசகாரியம் 2) சன்மார்க்க சித்தியார் 3) சிவாக்கிரமத் தெளிவு 4) சித்தாந்தப் பஃறொடை 5) சித்தாந்த சிகாமணி 6) உபாய நிட்டை வெண்பா 7) உபதேச வெண்பா 8) நிட்டை விளக்கம் 9) அதிசயமாலை 10) நமச்சிவாயம் 11) தசகாரிய மாலை 12) உபதேச பஃறொடை 13) தசகாரியம் 14) பஞ்சாக்கரப் பஃறொடை. இவற்றில் 1-10 நூல்களின் ஆசிரியர் அம்பலவாண தேசிகர். 11-12 நூல்களின் ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி தேசிகர். 13ஆம் நூல் சுவாமிநாத தேசிகர். 14ஆம் நூல் பின்வேலப்ப தேசிகர். இவை மெய்கண்ட நூல்கள் போல் அவ்வளவு புகழ்வாய்ந்தவை அல்ல.
பண்டாரி - பண்டாரம். எ-டு பண்டாரி ஆனபடிபோற்றி (போப 20).
பண்டிதாராத்யர் - வீர சைவ ஆசாரியர்.
பண்டித் டாக்டர் பி.என்- மகாராட்டிரத்தில் ஸ்ரீவித்யா உபாசகர்களாக இருந்த நாதபந்தைச் சார்ந்தவர்களின் ஒரு வெள்ளம், காச்மீரத்தில் கலந்திருக்க வேண்டும் என்பது இவர் கருத்து.
பண்டிபட - வயிறு பருக்க
பண்டு - தொன்மை, எ-டு பண்டு போல் பண்ணும் ஈசன்.
பண்ணுதல்- குதிரையை விரைவாக ஒட்டுதல்.
பண்பலார்- பண்பில்லாதவர். அகன்பதியினரில் ஒரு வகையினர்.
பணி - தொண்டு. எ-டு நாதன் பணி.
பணிஞானி- தொண்டு தவச்சீலர். இவர்கள் நால்வர்: ஞானி, யோகி, வேகி, போகி, எ-டு ஞானயோகக் கிரியா சரியை நான்கும் நாதன்தன் பணிஞானி நாலினுக்கும் உரியன்.(சிசிசுப326).
பணிமொழியார் - மாதர்.
பதங்கள் - பதவிகள், எ-டு பதங்கள் நால்ஏழ்.
பதஞ்சலி- யோகசூத்திரம் செய்தவர். யோகமதம் இவர் பெயரால் பாதஞ்சலம் எனப்படும்.
பதம் - மந்திரம் இது 11.
பதமுத்தி - சாலோகம், சாமீபம், சாரூபம்.
பதவி - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்
பத்ததி- சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம் ஆகிய மூன்று பாதங்களை விளக்கும் நூல்கள். சிவாசாரியர்கள் இயற்
179