பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரமாணு

'

பரியாயப் பெயர்


பரமாணு- மிக நுண்ணிய அணு.

பரமானந்தம்-பேரின்பம்

பரமான்மா-பரம்பொருள்.

பரமுத்தி-ஆன்மாஎவ்வகையான உடம்போடும் கூடி நில்லாது நீங்கித் தான் தனித்தே இறைவனை அடையும் நிலை. முத்தியில் ஒருவகை "அயரா அன்பின் அரன்கழல் செலுமே" (சிபோதுபாll)

பரமுத்தியில் பத்தி- முத்தியிலும் ஆன்மா இறைவன்பால் அன்பு செலுத்துதல்.

பரமேசுவரன்- பரமசிவன்

பரவசம்- மலமாகிய புறப்பொருள் வசம்

பரவிப் பார்த்தல் - புடைபட ஒற்றி ஆராய்தல்.

பரவுடம்பு - காரண உடல்.

பரவுதல்-யாவருக்கும்புலனாகும் படி நிகழ்தல்.

பரன் உணர்வு- சிவன் உணர்வு.

பராசத்தி - அறிவு வயமான சிவசத்தி

பராசரமாமுனி- வியாசர் மகன். வசிட்டரின் பேரன். வாய்மையுள்ளவர், மறைஞான சம்பந்தர் இம் முனி கோத்திரத்தைச் சேர்ந்த்வர்.

பராபரன் - பரம்பொருள்.

பரார்த்த பூசை -1) அனைத்துயிருக்கும் அருள வேண்டிச் சிவனைக் கோயில்களில் பிரதிட்டை செய்து பூசித்தல்.2)சமுதாயநலன்கருதிச்செய்யும்பூசை

பரார்த்தலிங்கம்- சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிக லிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐவகைப் பட்டதும் திருக் கோயில்களில் உள்ளதுமான சிவலிங்கம்.

பராவுதல் - சஞ்சரித்தல்

பரிகரித்தல் - களைதல்

பரிக்கிரக சத்தி- மாயை தொழிற்குக் காரணமாய் இருக்கும் வினையாற்றல்.

பரிசம்- ஊறு ஐம்புலன்களில் ஒன்று.

பரிசத் தீக்கை-தொட்டுத் தீக்கையளித்தல், சைவ தீக்கை 7இல் ஒன்று.

பரிசனம் - பரிவாரம்.

பரிசாங்கிய விதி-ஒன்றை நிறுவப்பயன்படும் தர்க்க விதி.

பரிசு-கொடை பயன், இயல்பு. எ-டு பார்ப்பாய வேடங்கட்டி ஆடுவோர் பரிசு போலும், (சிசிசு 214).

பரிணாமம்-1) உள்ளது சிறத்தல், கூர்தலறம், படிநிலை வளர்ச்சி உயிர் மலர்ச்சி 2) ஒன்று மற்றொன்றாதல்-பால் தயிராதல்.

பரிணாம வாதம்- ஏகான்ம வாதம் பரப்பிரமமே உலகமாக மலர்ந்தது என்னும் கொள்கை இது ஏகான்மா வாதிகளுள் ஒரு சாரர் கொள்கை. இக்கொள்கையினர் பரிணாமவாதிகள்.

பரிதல் - இரங்குதல்

பரிதி,பரிதியங்கடவுள்-கதிரவன்.

பரிபவம் - அவமானம்.

பரிபாகம் - உத்தம பக்குவம்

பரிபாலித்தல் - காத்தல்.

பரிமா - குதிரை.

பரியந்தம் - முடிய, வரை, எ-டு பாதாளசத்திபரியந்தம்(இஇ6)

பரியாயம்- ஒத்த பொருளுடைய பெயர்.

பரியாயப் பெயர்-ஒத்த பொருளுடைய பெயர்.

182