பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழக்கம்

பன்னிரு சோதி லிங்கத் தலங்கள்


 பழக்கம் - வழக்கத்தில் இருப்பது. எ-டு சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

பழமொழி - முதுமொழி

பழம் - முக்கனி : மா, பலா, வாழை,

பழி - குற்றம்

பழுதிலா அருள் - கண்ணப்ப நாயனார் அன்பு.

பழுதை - கயிறு, எ-டு பழுதையைப் பாம்பென நினைத்தல்.

பழைய வினை - உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளால் துய்த்தனவும் பிறந்த உடம்பால் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் துய்க்கக் கடவதாகவுள்ள வினை.

பள்ளியறை - காலையில் இது திறக்கப்படுவது. சிவமும் சத்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு அதனை மூடுதல் சத்தியானது சிவத்தில் ஒடுங்கும் பொழுது ஏற்படும் இலயத்தையும் குறிப்பவை.

பளிங்கு - படிகம்.

பறவாக்குளவி - மலைப்பச்சை

பற்றதனைப் பற்று விடல் - ஐம்பொறிகளால் இயங்கும் ஐம்புலன்களை ஒழிக்கும் ஒப்பற்ற திருவருனை அறிவாயாக அவ்வருளை இன்பமாகக்கொண்டு சிவத்தால் பொருந்திப் பற்று விடாது இருப்பாயாக அப் பொழுது பேரின்பம் தோன்றும் (திப 31;திவ14; குறள்,350)

பற்றறுதல் - பாசம் நீங்குதல்

பற்றறுப்பார் - பற்றை விடுபவர்.

பற்று - ஆசை. விட்டொழிக்க வேண்டிய ஒன்று. எ-டு பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள் 350) பா.பாசம்.

பற்றுக்கோடு - கொழுகொம்பு.

பறி - நீக்கு எ-டு தலை பறிஉற்று.

பன்மம் - திருநீறு.

பன்றி - வராகம்.

பன்னகம் - பாம்பு.

பன்னகைப்பூணினான் - பாம்பை அணிகலனாகக் கொண்ட பரம்சிவன்.

பன்மை - உயிர், இறை, தளை

பன்னிரு சோதிலிங்கத் தலங்கள் -

1) கேதாரம் (இமயம்) - கேதாரேசுவரர்.

2) சோமநாதம் (குஜராத்) - சோமநாதேசுவரர்

3) மகாகாளேசம் (உஜ்ஜனி) - மகாகாளேசுவரர்

4) விசுவநாதம் (காசி) - விசுவநாதேசுவரர்.

5) வைத்திய நாதம் (மகாராட்டிரம்) - வைத்திய நாதேசுவரர்.

6) பீமநாதம் (மகாராட்டிரம்) - பீமநாதேசுவீரர்.

7) நாகேசுரம் (மகாராட்டிரம்) - நாகநாதேசுவரர்

8) ஓங்காரேசுவரம் (மத்தியபிரதேசம்) - ஓங்காரேசுவரர்.

9) திரயம்பகம் (மகாராட்டிரம்)- திரயம்பகேசுவரர்.

10) குசுமேசம் (மகாராட்டிரம்) - குசுருணேச்சுவரர்.

11) மல்லிகார்சுனம் - சீசைலம் (ஆந்திரம்) - மல்லிகார்ச்சுனர்.

12)இராமநாதம் (இராமேசுரம்) - இராமநாதேசுவரர்.

184