பழக்கம்
பன்னிரு சோதி லிங்கத் தலங்கள்
பழக்கம் - வழக்கத்தில் இருப்பது. எ-டு சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
பழமொழி - முதுமொழி
பழம் - முக்கனி : மா, பலா, வாழை,
பழி - குற்றம்
பழுதிலா அருள் - கண்ணப்ப நாயனார் அன்பு.
பழுதை - கயிறு, எ-டு பழுதையைப் பாம்பென நினைத்தல்.
பழைய வினை - உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளால் துய்த்தனவும் பிறந்த உடம்பால் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் துய்க்கக் கடவதாகவுள்ள வினை.
பள்ளியறை - காலையில் இது திறக்கப்படுவது. சிவமும் சத்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு அதனை மூடுதல் சத்தியானது சிவத்தில் ஒடுங்கும் பொழுது ஏற்படும் இலயத்தையும் குறிப்பவை.
பளிங்கு - படிகம்.
பறவாக்குளவி - மலைப்பச்சை
பற்றதனைப் பற்று விடல் - ஐம்பொறிகளால் இயங்கும் ஐம்புலன்களை ஒழிக்கும் ஒப்பற்ற திருவருனை அறிவாயாக அவ்வருளை இன்பமாகக்கொண்டு சிவத்தால் பொருந்திப் பற்று விடாது இருப்பாயாக அப் பொழுது பேரின்பம் தோன்றும் (திப 31;திவ14; குறள்,350)
பற்றறுதல் - பாசம் நீங்குதல்
பற்றறுப்பார் - பற்றை விடுபவர்.
பற்று - ஆசை. விட்டொழிக்க வேண்டிய ஒன்று. எ-டு பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள் 350) பா.பாசம்.
பற்றுக்கோடு - கொழுகொம்பு.
பறி - நீக்கு எ-டு தலை பறிஉற்று.
பன்மம் - திருநீறு.
பன்றி - வராகம்.
பன்னகம் - பாம்பு.
பன்னகைப்பூணினான் - பாம்பை அணிகலனாகக் கொண்ட பரம்சிவன்.
பன்மை - உயிர், இறை, தளை
பன்னிரு சோதிலிங்கத் தலங்கள் -
1) கேதாரம் (இமயம்) - கேதாரேசுவரர்.
2) சோமநாதம் (குஜராத்) - சோமநாதேசுவரர்
3) மகாகாளேசம் (உஜ்ஜனி) - மகாகாளேசுவரர்
4) விசுவநாதம் (காசி) - விசுவநாதேசுவரர்.
5) வைத்திய நாதம் (மகாராட்டிரம்) - வைத்திய நாதேசுவரர்.
6) பீமநாதம் (மகாராட்டிரம்) - பீமநாதேசுவீரர்.
7) நாகேசுரம் (மகாராட்டிரம்) - நாகநாதேசுவரர்
8) ஓங்காரேசுவரம் (மத்தியபிரதேசம்) - ஓங்காரேசுவரர்.
9) திரயம்பகம் (மகாராட்டிரம்)- திரயம்பகேசுவரர்.
10) குசுமேசம் (மகாராட்டிரம்) - குசுருணேச்சுவரர்.
11) மல்லிகார்சுனம் - சீசைலம் (ஆந்திரம்) - மல்லிகார்ச்சுனர்.
12)இராமநாதம் (இராமேசுரம்) - இராமநாதேசுவரர்.