பெருமிழலைக் குறும்ப நாயனார்
பேரின்பம்
மகா வாக்கியங்கள் அல்லது பெரும்பெயர்கள் எனப்படும். பா. ஈண்டிய பெரும்பெயர்.
பெருமிழலைக் குறும்ப நாயனார் - மிழலை சோழநாடு. சுந்தரரைக்கு குருவாக எண்ணி யோகத்தில் இருந்தவர். குரு வழிபாடு (63)
பெருவடிவு - இறைவன்.
பெருவெழுத்து - நமசிவாய என்பதில் சிவபெருமானைக் குறிக்கும் சிகரம் என்னும் சிவம்.
பெறுதல் - அடைதல்.
பெற்றி - பெருமை, பேறு. எ-டு பெருமான் பெற்றியே பெற்றி.
பெற்றிமை - சாதி, இனம், பிரிவு.
பெறுவிக்கப்பட்ட - தோற்றுவிக்கப்பட்ட
பேசா எழுத்து - சிகாரம் ஆகிய சிவம்.
பேசாமை பெற்று - திருவைந்தெழுத்து ஓதுதல் இது ஓதுமுறை. ஒலிக்கும் முறை, நிற்குமுறை என மூவகை ஓது முறை பிறர் செவிக்குக் கேட்பது. ஒலிக்குமுறை: தன் செவிக்கு மட்டும் கேட்பது. நிற்குமுறை உள்ளத்தமைவது.
பேசும் எழுத்து - வகாரம்
பேதம் - வேறுபாடு. இது 14. சிவபேதம் 7. சத்திபேதம் 7. ஒ. அபேதம், பேதாபேதம்
பேத சித்தாந்தம் - உயிரும் இறைவனும் இருளும் ஒளியும் போல் உள்ளவர்கள் என்னும் கொள்கை.
பேதவாதம் - சிவனுக்கு வேற்றுமை கூறுங்கொள்கை. இக்கொள்கையினர் பேதவாதிகள்.
பேதவாத சைவம் - ஐம் பொறிகளை நீக்கி மெய்ப்பொருளை அடைதல் தேவை இல்லை என்னுங் கொள்கையினர். ஏனெனில், கருவிகளை நீக்கினால், செயல் ஒன்றும் இல்லை என்பதே இவர்கள் வாதம் இக்கொள்கை உடையவர் பேதவாத சைவர்.
பேதாபேதம் - வேறு வேறு அல்லது வேற்றுமையில் ஒற்றுமை அத்து வைதத்துக்கும் விசிட்டாத்து வைதத்துக்கும் நடு நிலையான ஒரு முடிவு.
பேதாபேத வாதம் - உயிரும் இறைவனும் ஒன்றுதான்; வேறுதான் என்னுங் கொள்கை.
பேதை - அறிவிலி. ஒ மேதை
பேய் - பிசாசு, அருவம்
பேய்த்தேர் - கானல்நீர்.
பேரருள் உடையனாதல் - பதி இயல்புகளில் ஒன்று. இறைவன் அறிவே பேரறிவு. ஆகவே, அவன் பேரருள் உடையவனாதல் இயற்கை
பேரன்பு - திருவருள் அன்பு.
பேராமல் - மாறிப்பிறழாமல்
பேராளன் - இல்றைவன் பேராற்றல் படைத்தவன்.
பேரின்பம் - நிலைத்த இன்பம். வேறு பெயர் முத்தி, வீடுபேறு, பிறவா நெறி சிவஞான போதம் 10ஆம் நூற்பாவில் உயிர் ஏகனாகி இறைபணி நிற்றலால், மலம் மாயை வினை நீங்கும் என்றும் 11ஆம் நூற்பாவில் அவை நீங்கிய இடத்து உயிர் பேரின்பம் எய்தும் என்றும் கூறப்படுகின்றன. சிவஞான சித்தியார் இவ்வின்பத்தை எட்டு வகையாகப் பிரிக்கின்றார். பா. முத்தி.