பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னுதல்

மாதவன்


 மன்னுதல் - நிலைபெறுதல்.

மன்னுபவம் - பிறவிப்பிணி.

மன்னுபலன்கள் - நிலைத்த புலன்கள்.

மன்னும் - நிலைபெற்று நிற்கும்.

மன்னும் சிவன் - பேரின்பக்காரணன்.

மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்.

மனை - மனைவி.

மனோவிகற்பம் - மனவேறுபாடு.

மனோன்மணி - இறைநிலை, பார்வதி.

மா

மா - பெரிய, அரு குதிரை, எ-டு மாமறை, அருமறை, மாநாடு, மாநிலம்.

மாஇருள் - பெரிய இருள்.

மாசறு - மாசிலா, எ-டு மாசறு பொன்.

மாட்சி - சிறப்பு:இறைமாட்சி

மாட்டாமை - இயலாமை,

மாட்டு - கூற்று. உரிமைகொளல் எ-டு. எனதென்ற மாட்டின்

(சிபோ பா 17).

மாட்டெறிதல் - ஒன்றுக்குச் சொன்ன விதியைப் பிறிதொன்றுக்கு மாட்டி விடுதல், எ-டு ஸ்ரீபஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க, முத்திப் பஞ்சாக்கரத்தை ஓதும் முறை கூறப்பட்டுள்ளது போல், ஸ்ரீபஞ்சாக்கரத்தையும் ஓதுக என இங்கு மாட்டி விடப்பட்டது.

மாட்டேறு - மாட்டெறிதல். ஏறிட்டுக் கூறுதல். ஓர் உத்தி. இந்நுட்பத்தால் சிவஞான போத நூற்பா 4, 3உடன் தொடர்பு உடையதாய் ஆன்ம இலக்கணம் உணர்த்துவது.

மாடு - செல்வம்.

மாண்ட - மாட்சிமை பொருந்திய, எ-டு மாண்ட என் மனைவி மக்கள் பிசிராந்தையார்.

மாணிக்கவாசகர் - சமயக் குரவர் நால்வரில் ஒருவர். திருவாசகம், திருக்கோவை ஆகிய தோத்திர நூல்களின் ஆசிரியர். அந்தணர் திருவாதவூர். வேறுபெயர் மணிவாசகர். சிறப்புப் பெயர் மணிமொழியார், கோவை வேந்தர். படி, ஞானத்தில் ஞானம் நெறி நன்னெறி, முத்திநிலை சாயுச்சியம். திருமுறை 8. முத்தியடைந்த வயது 32. காலம் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவர்.

மாணிக்க வாசகர் செய்த அற்புதங்கள் -1) சிவபெருமானே நரியைப் பரியாக்கி கொண்டு வருமாறும் மண் சுமந்து அடி படிமாறும் பத்தியால் கருணை பெற்றது. 2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகளாக்கிப்பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது. 3) பிறவி ஊமையாய் இருந்த பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படிச் செய்தது. 4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுதிப்படி பெற்றுக் கொண்டவர். 5) எல்லோரும்காணக்கனகசபையில் புகுந்து சிவத்தோடு கலந்தது.

மாணவக - மாணவனே.

மாணாமை - மாட்சி இல்லாமை.

மாதர் எழுவர் - அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.

மாதவன் - திருமால்,

214