பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்த்தாண்டவ பைரவர், மூர்த்தி

மானுடலிங்கம்



மார்த்தாண்டவபைரவர், மூர்த்தி - சூரியன்

மாருதம் - காற்று.

மாருதி- வீமன், அனுமான்.

மால் - மயக்கம், திருமால்.

மால் ஆழி - அருட்கடல்

மால் சமயம் - வைணவம்

மால் சமயத்தோர் - வைணவர்.

மால் தங்கை- உமை.

மாலினார் சேலினார் - பேரழிவுக் காலத்திலே உலகைக் காக்க வேண்டி மீன் வடிவு கொண்டு ஏழு கடல்களையும் ஒரே செலுவில் (செவுளில்) திருமால் அடக்கித் தான் வினை முதல் என்று செருக்கு கொண்டார். அவர் செருக்கை அடக்க வேண்டி, அந்த மீனைப் பிடித்து அதன் செலுவினையும் கண்ணினையும் இடந்து, கூரிய திரிசூலத்தின் மேல் சூலபாணியாகிய அயன் அணிந்தார். மாலினார். திருமால் சேலினார் - மீன் வடிவினார். (சிசிசுப 280).

மாலினி - துர்க்கை

மாலைத்தேவு - திருமாலே கடவுள்.

மாலை மாற்று - புதிய அணி வகையில் ஒன்று எழுத்துகளை ஈறு முதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமலிருக்கும் மிறைக்கலிவகை.பா. திருஞான சம்பந்தர்.

மாபாடியம் - பேருரை, சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்கு எழுதிய சிறப்புரை. இது திராவிட மாபாடியம் எனப்படும். பா. பாடியம்

மாமுனி - பரஞ்சோதி முனிவர்.

மாவலி - ஓர் அரசன். மூவடி கொடுத்த இவ்வரசனைத் திருமால் சிறையிலிட்டது ஈனம் என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது.

மாவிரதம் - அகப் புறச் சமயம் 5இல் ஒன்று.

மாற - பரிவர்த்தனை செய்ய,

மாற்றமதி - போக்குவீராக.

மாறு - முரண்.

மாறுகோள் - மறுபாடு.

மாறுகோள் உரை - முன்பின் முரணும் வசனம்.

மாறுதல் - இறத்தல், மாற்றமடைதல்.

மான் - 1) மகான் 2) மூலப்பகுதி 3) பெருமை.

மான்று இருப்பு - மயக்கம்.

மானக்கஞ்சாற நாயனார் - வேளாளர் தஞ்சாவூர்-சோழ நாடு மாவிரதியார் கோலம் பூண்டு வந்த சிவபெருமானுக்கு மணக்கோலத்தில் இருந்த தன் பெண் கூந்தலைக் கேட்டபடி அரிந்து கொடுத்தவர். சங்கம வழிபாடு (63),

மானசதீக்கை - தீக்கை 7இல் ஒன்று. மனத்தால் பாவித்துத் தீக்கை செய்தல். சீடன் மனத்தில் யோக சித்தியால் குரு புகுந்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீக்கை வகை.

மானச பூசை - மனப் பாவனையாலே வழிபடுதல் அகவழிபாடு.

மானதக்காட்சி - ஒரு பொருளை ஐயந்திரிபற அறிதல். காட்சியில் ஒரு வகை

மானம் - 1) குற்றம் 2) காட்சி முதலியவை.

மானுட லிங்கம் - மனிதரால் நிறுவப்பட்ட உரு.

217