பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மானுடர்

முண்டர்


மானுடர் - மனிதர்.

மானே தொழுகை வலி - பெரியோரை வழிபடுதல் உயிர்க்கு வலிமையாகும் (சிபோபா 80)

மி

மிக்கு வழங்குதல் - பரந்து நிகழ்தல்.

மிகுதிப்பாடு, மிகை- அதிகம்.

மிச்சிரம் - கலந்தது.

மிசிரப் பிரபஞ்சம்- சுத்தா சுத்த மாயா பிரபஞ்சம்.

மிசை - மேலிடம், மிக்கு

மித்தை உணர்வு - பொய்யறிவு.

மத்தியாத்துவம்- உண்மை நில மறைத்தல்.

மிருதி- சமயம் சார்ந்த அறநூல். முனிவரால் செய்யப்பட்டது.

மிருத்தியு- இறப்பு நிகழ்த்துவது.

மிருத்தியுஞ்சயன்- சிவபிரான்.

மீ

மீட்சி - மீளுதல்.

மீதானம் - மேலானம் இடம், சிவனடி, எ-டு மீதானத்தே செல்க உந்தீ பற (திஉ8)

மீமாஞ்சகர் - மீமாஞ்சை சமயத்தினர்.

மீமாஞ்சை - சைமினி என்னும் முனிவர் வேதத்தின் பூருவ காண்ட ஆராய்ச்சியாகச் செய்த நூல்

மீமாஞ்சை மதம் - மீமாஞ்சை நூலில் கூறப்பட்டுள்ள கருத்து களைத் தழுவிய சமயம். இது பட்டாசாரிய மதம், பிரபாகரன் மதம் என இருவகை. பிரபஞ்சம் முத்தொழில் உடையது. முதல்வனிடமிருந்து சத்தி வேறுபட்டது என்னும் கொள்கை உடையது இது.

மீன் - விண்மீன்.

மீனாட்சி- மதுரைத்தெய்வமாகிய உமை

மு

முகத்தல் - அள்ளுதல்.

முக்குணம்- சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்று குணங்கள்.

முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம். இது வள்ளுவர் வகைப்பாடு

முக்குற்றம் கடிந்தவர் - மெய்யுணர்வு முதிரப் பெற்றவர்.

முக்கோணம்- மூன்று மூலைகளைக் கொண்டது. அனல் முக்கோணம் ஒ. அறுகோணம்

முகுரம்- கண்ணாடி எ-டு கவரும் தன்மை முகுரம் போல.

முகை - அரும்பு, மொட்டு, எ-டு கண்டஇரு தயகமல முகைகள் எல்லாம் (சிசிபப 6).

முட்டாமல் - தடைப்படாமல்

முடி- தலையணி, அணிகலன்களில் ஒன்று.

முடித்ததுமுடித்தல்- முன்முடித்ததைப்பின் முடித்துக்காட்டல் சிவஞான போதம் வெண்பா 5இல் ஈறே முதல் என்றது சங்காரமே முதல் என்னும்மேற்கோளை முடித்துக் காட்டியமையால், முடித்தது முடித்த லாகும்.

முடிவினை - ஊழ்வினை.

முண்டகம் - தாமரை.

முண்டபங்கி- ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாய் உள்ள சிவனை ஐந்து முகங்களோடு கூடியவராகத்தியானித்தல்.

முண்டர் - சைவர்.

218