முனைவன்
மூலப் பிரகிருதி
முனைவன் - முதல்வன்.
முன்னை நாள்- முதல் நாள்.
முன்னை முதல் இல்லோன் - தனக்கு மேல் ஒரு வினை முதல் இல்லாதவன்.
முனிகணம் - முனிவர் கூட்டம். சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் மாணவராக உள்ளவர்.
முனி மரபு - இறைமை.
முனிவு - சினம், ஒறுத்தல் எ-டு ஈசனார் முனிவு.
முனையடுவார் நாயனார் - வேளாளர் நீடூர்-சோழநாடு போரில் பகைவரை வென்றும் பிறர்க்குத் துணையாய் நின்று வெற்றி வாங்கித் தந்தும் பெற்றபொருளால் சிவனடியார்க்கு அன்னம் பாலித்து வந்தவர். சங்கம வழிபாடு (63).
முனைவன் - கடவுள், புத்தன்.
மூ
மூ - மூன்று.
மூட்சி- மூளுதல்.
மூடருபம் - முடமாய் இருக்கும் தன்மை.
மூத்திராதி - சிறுநீரக உறுப்பு.
மூத்தோர் - அடிகள், ஆசான், தலைவன், ஐயன், பெருமான்.
மூர்க்க நாயனார் - வேளாளர். திருவேற்காடு தொண்டை நாடு. சூதாடி அதிற் கிடைத்த பொருளை எல்லாம் அடியவர்க்கு அமுதுாட்டுவதற்குச் செலவு செய்தவர். சங்கம வழிபாடு (63).
மூர்ச்சை - மயக்குவது.
மூர்த்திநாயனார் - வணிகர். (மதுரை) பாண்டி நாடு. திருஆலவாய் இறைவனுக்குச் சாத்தச் சந்தனம் அரைத்து வந்தவர். இலிங்க வழிபாடு (63).
மூல அருங்கட்டில் - மூலாதாரமாகிய கட்டில்.
மூலஅவத்தை- கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்றும்.
மூல உடம்பு - முதல் உடல் 31 தத்துவமும் மூல உடம்பு. வித்தியா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24.
மூலம்- முதல், முனை, இறை சித்தம் எ-டு மூலநூல், முதல் நூல் துரியாதீதம் எனப்படும் மூலாதாரம்
மூலம்ஐந்து- 1) வில்வவேர் பெருங் குமிழம் வேர், தழுதாழை வேர், பாதிரிவேர், வாகைவேர். இவை பெருபஞ்சமூலம் 2) கண்டங்கத்திரி வேர், சிறு மல்லிவேர், பெருமல்லிவேர், சிறுவழுதுளைவேர், நெருஞ்சி வேர் இவை சிறு பஞ்சமூலம்
மூல கன்மம்- அனாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள கன்மம்.
மூலகாரணம்- முதல் காரணம்.
மூலநோய் - ஆணவ மலம்.
மூலபஞ்சாக்கரம்- நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தாகிய மந்திரம்.
மூலப்பிரகிருதி- பொருள் மூலப்பகுதி, மூலம்
கொள்கை
1) சாங்கியர் கொள்கை கலை என்னும் தத்துவத்திலிருந்து வித்தை, அராகம் ஆகிய இரண்டும் தோன்றியபின் பிரகிருதி தோன்றுவது. "இது எல்லாவற் றிற்கும் மூலம் இஃது அநாதி ஆகும். ஒன்றிலிருந்து தோன்றியது அன்று” என்பதுசாங்கியர்
222