அப்பா
அபேதிகள்
சரியை, நெறி, அடிமை நெறி,முத்திநிலை சாலோகம் பாடிய பதிகத் தொகை 49,000 இன் றுள்ள பாடல்கள் 3066 (63), திருமுறை 4-6, இறுதியாகப் பாடியது. "எண்ணுகேன் என் சொல்லி, முத்தியடைந்த அகவை 81 காலம் கி.பி. 6-7 நூற்றாண்டுகள்.
அப்பா - மகனே, அப்பனே.
அப்பிரகாசம் - எதனாலும் அறி யப்படாதது, அசித்து, சூனியம் காட்சிக்குப்புலனாகாதது. எ-டு முயற்கோடு, ஆகாயத்தாமரை ஒ. பிரகாசம்.
அப்பிரசித்தம்-விளக்கமின்மை, ஒ. பிரசித்தம்
அப்பிரமேயம் - அளவையால் அளக்கப்படாதது.
அப்பு-சிவம், நீர் ஐம்பூதங்களில் ஒன்று.
அப்பூதியடிகள் - மறையவர். திங்களுர் - சோழநாடு நாவுக் கரசர் பேரில் தண்ணிர்ப் பந்தல் அமைத்துத் தொண்டு செய்தவர். குருவழிபாடு.(6.3) அப்பைய தீட்சதர் - கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. பூரீகண்டா பாஷ்யத்திற்குச் சிவார்க்க மணி தீவிகை என்னும் அரிய உரைநூல் எழுதியவர்.
அப்ஜம் - நீர்
அபாவஅளவை-ஒரு பொருள் இல்லாமை பற்றிக் கூறும் பிரமாணம்
அபாவத்தே-இல்லாத இடத்து
அபாவம் - 1. இன்மை, எ-டு அருஞ்செயலின் அபாவத்தே (சிசி பப 205) 2. அளவை 8 இல் ஒன்று.
அபானன்-10 வளிகளில் ஒன்று.
அபிடேகம் - சமய விசேட நிருவாணம் பொருந்திய திரு முழுக்கு என்னும் நான்கு வகைத் தீட்சை.
அபிடேகப் பொருள்கள் - இங்குக் கொடுக்கப்பட்டிருப் பவை நிறை நிலவு நாட்களில் ஒவ்வொரு திங்களும் பயன்படுத் தப்பட வேண்டியவை 1. மருக் கொழுந்து சித்திரை 2.சந்தனம் வைகாசி3 முக்கனி ஆனி 4ஆவின் பால்-ஆடி 5.சர்க்கரைஆவணி 6. அதிரசம் - புரட்டாசி 7 அன் னம் - ஐப்பசி 8 தீபம் கார்த் திகை 9.பசு நெய் மார்கழி 10, கருப்பஞ்சாறு - தை 11. கம் பளம், இளவெந்நீர் மாசி 12 பசுந்தயிர் பங்குனி
அபிநவகுப்தர்- காச்மீர சைவத்தை நிறுவியவர். கி.பி. 8 ஆம் நூற்றாண்டு.
அபிமுக மாத்திரை - சந்நிதி மாத்திரை.
அபுத்தி பூருவம் -அறியப்படாதது.
அபூர்வம்-அரும்பொருள். எடு அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வம் எனும் அது தோன்றித் (சிசிபப 205).
அபேதம் - வேறில்லாத நிலை. அபேதசித்தாந்தம்-ஆன்மாவும் சிவமும் ஒன்று என வாதிக் கும் மாய வாதக்கோட்பாடு.
அபேத வாதம் - பா. அத்துவிதக்கொள்கை
அபேதவாதி-'அத்துவைதி
அபேதிகள் - மாயாவாதிகளான அபேதவாதக்கொள்கை யினர். சீவான்மாவும் பரமான் மாவும் ஒன்றெனக் கூறும் கொள்கை.