பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வித்தகர்

வித்தை


வித்தகர் - எல்லா வல்லமையும் படைத்தவர் சித்தர்.

வித்தியா தத்துவம் - பெயர்: சிவன் அருளால் வழி நிற்கும் வித்தியேசுவரராகிய அனந்த தேவர் தொழிற்படுத்துவதால், இதற்கு இப்பெயர்.

தோற்றம்: அசுத்த மாயையிலிருந்து தோன்றுவது. காலம், நியதி, கலை ஆகிய மூன்றும் மாயையினின்று தோன்று பவை. காலத்துக்குப் பின் நியதி தோன்றும் நியதிக்குப் பின் தோன்றுவது வித்தை, கலையினின்று தோன்றுவது.

வகை:தத்துவம் மூன்றில் ஒரு வகை. இதில் அடங்குவன; காலம், நியதி,கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என ஏழு இவை ஒவ்வொன்றும் ஒரு தத்துவமே.

செலுத்துகை; சிவ தத்துவம் (நாதம்) மாயையினையும், சத்தி (விந்து) கால நியதிகளையும், சாதாக்கியம் புருடனையும், ஈசுவரம் அராகத்தையும், சுத்த வித்தை வித்தையினையும், செலுத்துவதால், உலக நுகர்ச்சியில் உயிர்கள் ஈடுபடமுடிகின்றது.

காலம்: நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என மூவகை. இது தனக்குக் கீழுள்ள உலகத்தை எல்லாம் கால வரையறை செய்து தோற்றியும் நிலை நிறுத்தியும் அழித்தும் இறைவன் ஆணைப்படி நடத் துவிக்கும்.

நியதி: இது உயிர்களின் இரு வினைகளை அவரவர்களே நுகருமாறு ஒழுங்கு செய்யும்.

கலை: இது ஆணவத்தின்ன மறைப்பைச் சிறிது நீக்கி உயிர்களின் வினையாற்றலைத் தொழிலில் ஈடுபடுமாறு செய்கிறது.

வித்தை - இது உயிர்களின் அறிவாற்றலை உண்டாக்கிச் செய்திகளை அறியச் செய்வது. உயர் கலைகளில் சிறிதேதோன்றுவது.

அராகம்: விருப்பம் இருவினைக் கேற்ப நுகர்ச்சி ஏற்படுமாறு உயிர்களின் விருப்பாற்றலை விளக்கி நிற்கும்.

புருடன்: இதுகாறும் கூறிய 5 உடல்களையும் அணிந்து அறிவு, வினை, விருப்பம் ஆகிய ஆற்றல்கள் விளக்கமுறுவதால், உயிர் புருடன் எனப்படும். ஐந்து உடல்களாவன; பஞ்சகஞ்சகம், காலம், நியதி, கலை, வித்தை,அராகம்.

மாயை: அசுத்த மாயையின் முதல் தத்துவமாக உயிரைச் சார்ந்து விளங்குவது காரிய மாயை. மாயை தனித்தே உள்ள காரணப்பொருள். பிற பொருளைத் தோற்றுவிப்பது.

வழக்கு: காரிய மாயையைக் காரண உடல் என்பது ஆகம வழக்கு. உபநிடத வழக்கு ஆனந்தமயகோசம் எனப்படும். மலத்தால் மறைப்புண்டுள்ள உயிரின் அறிவு செயல், விழைவு ஆகியவை விளங்கும் பொழுது நுகர்வோனாகிறது. உலகப் பொருள்களைப் பெண் எனவும் அவற்றில் மயங்கி ஈடுபடுவோனை ஆடவன் எனவும் கொள்வது தத்துவ மரபு. உபநிடத வழக்கில் ஐஞ்சட்டை விஞ்ஞானமயகோசம் எனப்படும்.

ஒப்பீடு: ஆன்மத் தத்துவத் தொகுதி உயிர்க்கு உணவு. வித்தியா தத்துவத் தொகுதி