பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசனம்

அருட்குறி


ளோடும் (சிசிசுப228) 2 அழிந் திடும் அராகமாதி (சிசிபப93),

அரிசனம் - மஞ்சள் முதலிய மணப்பொருள்கள். எ-டு அரிசனம் பூசி (சிசிசுப 185).

அரி-1 திருமால், சிவன் 2.சிங்கம்

அரிது - இனிமை குறிப்பது.

அரிமர்த்தனன் - பாண்டிய அரசன். இவனிடம் மாணிக்க வாசகர் அமைச்சராக இருந் தார்.

அரிய - அரிதான் எ-டு அரிய வெறுப்பு.

அரிவாட்டாய நாயனார் - வேளாளர். கணமங்கலம் - சோழ நாடு. சிவனுக்குச் செந் நெல், அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றைத் திரு அமுதாகக் கொடுத்து வந்தவர். இலிங்க வழிபாடு.

அரிவையர் - பூவையர்.

அரிவை - பார்வதி.

அரு - சத்து, மாயை, நுண்மை.

அரு அவிகாரி- திரிபில்லாதது. எ-டு அரு அவிகாரி ஆன்மா (சிசிசு 203)

அருஇயல் - அருவமானது. சித்தம் கன்மம் என இரண்டு. ஒ. உரு இயல், இரு இயல், மரு இயல்.

அருஉரு - உணர்வோடு கூடிய உயிரும் உடம்பும். உடல் உருவ மாயும் உயிர் அருவமாயும் இருத்தல். வேறுபெயர் நாம ரூபம். காட்சி, கருத்து, உணர்வு ஆகியவை நாமத் தினும், நிலம் முதலிய நான்கு பூதங்களின் சேர்க்கையாகி, உடம்பு ரூபத்திலும் அடங்கும்.

அருகம் - சமணம்

அருகர் - சமணர்

அருகன் ஞானம் - அருகன் அறிவு. மதி ஞானம், சுருதி ஞானம், அவதி ஞானம், மனப் பரிய ஞானம், கேவல ஞானம் என ஐவகை.

அருகன் தந்த நூற்பொருள் - அருகன் தோற்றுவித்த அங்கா கமம், பூர்வர்கமம், பகுசுருதி ஆகமம் என்று மூவகையிலும் கூறப்பட்ட பொருள். தருமாத் திகாயம் முதல், வீடு ஈறாக உள்ள பத்துப்பகுதிகள்.

அருக்கன் - கதிரவன்.

அருக்கியம் - அர்க்கியம்.

அருங்கதி - வீடுபேறு.

அருங்கலச் செப்பு- ஒரு சைன நூல்.

அருங்குணங்கள் - பா. எண் குணங்கள்.

அருங்கோடு பறித்து அணிந் தான் - அருங்கோடு பன்றி யின் கொம்பு, பேரழிவுக் காலத்தில் திருமால் பன்றியாய் வடிவெடுத்து, ஏழு உலகங் களையும் பெயர்த்துத் தன் பெரிய கொம்பிலே ஏற்றிக் கொண்டு நின்றார். அப்பெரு வலிவை உலகோர் உயர்வாகப் புகழ்ந்தனர். அதற்கு வினை முதல்வன் தானே என்று திருமால் செருக்குகொண்டார். உடன் துயரினால் துவண்டு புவியில் விழும்படி, அப்பன்றியின் கொம்பைப் பறித்துத் தனக்கு அணியாக அணிந்து கொண்டார் அயன். இது வினை முதல் அயனே என்று மெய்ப்பிக்கின்றது.(சிசிபப282).

அருஞ்சுரம்- செல்லுதற்கரிய பாலை நிலம்.

அருட்குறி -சிவலிங்கம்.

19