இலிங்கியர்
இறைநெறி
இலிங்கியர் - அனுமானப் பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்டு வாதிடும் புறச்சமயத்தார்.
இலீலை - தெய்வம் முதலியவற்றின் விளையாடல் அல்லது திருக்கூத்து. எ-டு மன்மதலீலை.
இலேசாற்கொள்ளுதல் - ஏக தேச விதியாகக் கொள்ளுதல். ஒர் உத்தி.
இழவு - கேடு, வறுமை.
இழிசொல் - குறளை, பொய், கடுஞ் சொல், பயனில் சொல் என நான்கு.
இழிந்தார் - செருக்கொடு சிவ நிந்தனை செய்பவர்.
இழிவு-சாக்காடு.
இளங்கோயில்-பலாலயம் ஒரு பழங்கோயிலுக்குக் குடமுழுக்கு நிகழ்த்துங்கால், கடவுளை வேறாக ஆவாகனம் செய்து வைக்கப்படும் சிறிய கோயில்.
இளம் பெருமானடிகள்-11 ஆம் திருமுறையில் சிவபெருமான் திருமும்மணிக்கோவை பாடியவர்.
இளமை - இளந்தன்மை. ஒ. மூப்பு இளைப்பு சோர்வு, வருத்தம் எ-டு இளைப்பதும் ஒன்றில்லை இவர் (திப 76).
இளையான்குடிமாற நாயனார் வேளாளர். இளையான்குடி பாண்டிநாடு சங்கம வழிபாடு (63).
இவன் - இறைவன். எ-டு எல்லாமாய் நிற்கும் இவன் (தி ப45).
இவ்வான்மாக்கள் - இறப்பில்லாத தவமிகுதியால்,இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநி பாதம் ஆகிய மூன்றும் வரப்பெற்ற ஆன்மாக்கள்.
இவுளி-குதிரை.
இவுளியார்-குதிரை வீரர்கள் எ-டு இவுளியார்க்கு முன்வரும் அவதாரங்கள் (சிசி பப 288).
இழுத்தல் - அறியச் செய்தல்.
இழை - நூல், பனுவல்.
இளி- ஏழு பண்களில் ஒன்று.
இறந்த- ஒடுங்கிய.
இறந்தோய் - கருவி அறிவுக்கு அப்பாற்பட்டவனே.
இறப்பில் தவம் - அழிவிலாப் புண்ணியம்.
இறப்பு-சாவு.இம்மை நிகழ்ச்சி பா. போக்கு.
இறவா இன்பம் - பேரின்பம் .
இற்பட - இல்லாதவாறு இற்படப் பிரிப்பின் மெய்ப்படும் (சநிரா 4).
இற்பு- இருள் தருவது.
இற்புக்கு - இல்புக்கு இல்லம் புகல்.
இறுதல் - அழிதல்.
இறுதி - சங்காரம், அழிப்பு.
இறும்பு - சிறு நூறு, புழு, எ-டு. வண்டு இறும்பு எடா உட்கொண்டு (சநிரா12).
இறுவாய்-இறுதி
இறை, இறைவன் - எல்லாங்கடந்த கடவுள், புருடனுக்கு மேலாகவுள்ள 24 தத்துவங்கள் (மெய்யங்கள்). அட்டாங்க யோகத்தால் இதைப்பெறலாம்.
இறைநெறி - மெய்ந்நெறி. அருள் நெறி. இது நீடுபுகழ் நிலைத்த நெறி. இறைவன் உயிர்களைப் புரத்தற்பொருட்டு, அவன்தானே ஆகிய நெறி, எ-டு அவனே