ஊழ்
எடுத்துக்காட்டு உவமை அணி
ஊழ் - விதி, ஊழிற்பெருவலியாவுள' என்பது வள்ளுவர் வாக்கு.
ஊழ்வகை - விதிவகை மூன்று : பிராரத்துவம் (நுகர்வினை), சஞ்சிதம் (கிடைவினை), ஆகாமியம் (செய்வினை). நான்கு : ஆகூழ் (ஆதல்), போகூழ் (போதல்), இழவூழ் (இழத்தல்), ஆகலூழ் (ஆக்கல்), பின்னது திருவள்ளுவர் வகைப்பாடு.
ஊறு - பரிசம், உறுத்துணர்ச்சி ஐம்புலன்களின் ஒன்று.
ஊனகம் - ஊடல், எ-டு ஊனகத்தே உன்னுமிது (திப 49)
ஊனக்கண் - பசு அறிவு, குறையறிவு, எ-டு, ஊனக்கண் பாசம் உணராப் பதியை (சிவோ நூபா 9)
ஊனக் கூத்து - பிறப்பியற்கூத்து -
ஊனம் -1. சுட்டறிவாகிய குறைபாடு பொது இயல்பு 2 வாதனை மலம்.
ஊனநடனம்-மறைப்பாற்றலால் உயிர் மறைக்கப்பட்டு மலத்துடன் இயைந்து நிற்கும் நிலை.
ஊன் - உடல், தசை
ஊனையார் - ஊனை + ஆர். உடல்காரிய எ-டு ஊனையார் தத்துவங்கள்.
எக்கிரமம் - எவ்வரிசை
எச்சன் - திருமால்.
எச்சாப் பொருண்மை - மிஞ்சாமை ஆகிய பொருள்.
எடா - உட்கொண்டு, எடுத்து.
எட்டா இயல்பின் - நான்முகன், திருமால் ஆகிய இருவரும் சூளுரைத்துச் சிவன் அடி முடி அறுதி இடுவோம் என்று தேடியும் காணாத சிவன்
எட்டு எழுத்து - ஓம் ஆம் அவ்வும் சிவாயநம.
எட்டுக் கொண்டார் - விண், மண், நீர், தீ, வளி, மதி, கதிரவன், உயிர் என்னும் எட்டினையும் திருமேனியாகக் கொண்டிருக்கும் இறைவன்.
எட்டுப்பண்புகள் - செழுமை, வலிமை, துன்பம், இன்பம், பிரிவிலாது இருக்கை, அயல் நாடு சேரல், மூப்பு, சாதல்.
எட்டுமவர்-தன்முனைப்பாலும் நூலறிவாலும் இறைவனைக் காணவிழைவோர்.
எட்டும் இரண்டும் உருவான இலிங்கம் - எட்டும் இரண்டும் உருவாய் இருக்கின்றயகாரமாகிய ஆன்மா.
எட்டுரு-எட்டு உருவங்கள். எடு எண்ணுறும் ஐம்பூதம் முதல் எட்டுருவாய் நின்றானும் (திப 3). -
எடுத்துக்காட்டு - உதாரணம், அனுமான உறுப்புகளில் ஒன்றுவாயில்நேரிதல் ஆதலை விளக்குவது. எடுத்துக்காட்டு உவமை அணி - உவமேயப் பொருளுக்குக் கூறும் அறத்தை உவமையிலும் எடுத்துக்காட்டுவது. எ-டு
இல்லா முலைப்பாலும் கண்ணிரும் ஏந்திழைபால். உற்று (சிபோ பா49)
இதில் உவமேயமாகிய முதல்வனுக்குவெளிப்பட்டுவிளங்காத தன்மையையும் குருவடிவாகத் தோன்றுவதையும் கூறி, உவமையாகிய அன்பிற்கு வெளிப்