பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எரு

ஏகனாகி ஒற்றுமைப்படுதல்



எரு - உரம்.

எல்லை - வரம்பு, அளவு, எ-டு, சொல்லப்புகும் இடம் எல்லை சிவனுக்கு என்று உந்தீபற (திஉ 29)

எலும்பு, என்பு - தந்து 6 இல் ஒன்று, திசு.

எவ்வம்- குற்றம், துன்பம்.

எழில் ஞானபூசை - அழகிய ஞானபூசை, இறைவன் திருவடி சேர உதவும் பூசை

எழுகாரியம் - சாவு

எழுமுனிவர் - அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டேயன்.

எழுத்து வகை - பா. கொடி காட்டும் எழுத்து.

எழுத்து வகைப்பிறப்பு - தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்காலிகள், மனிதர், தேவர் ஆகியவை.

எழுப்புதல் - விளக்கமடையச் செய்தல். சம்பந்தர் எலும்பை எழுப்புவித்தல், பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.

எற்ற - உதைக்க

எறிபத்த நாயனார்- கருவூர் சோழநாடு. சிவனடியார் துன்பம் நீக்கக் கோடரி ஏந்தியவர். சங்கம வழிபாடு (63)

என்பு - உடம்பு, எலும்பு.

என்மனார் புலவர் - என்று அறிஞர் கூறுவர். எ-டு அந்தம் ஆதி என்மனார் புலவர் (சிபோ நூபா 1).



- சிவன், திருமால்.

ஏகம் - ஒற்றுமை.

ஏகதாளம் - எழுவகைத் தாளங்களில் ஒன்று.

ஏகதேச உணர்வு-சிற்றறிவு.

ஏகதேச உருவகம் - எடுத்துக்கொண்ட பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகம் செய்து, ஏனையவற்றை உருவகம் செய்யாதுவிடல்

"ஐம்புல வேடரின் அயர்ந் தனை வளர்ந்து எனத்” (சிபோ நூபா 8)

இதில் ஐம்பொறிகளை மட்டும் வேடனாக உருவகம் செய்து, முதல்வனை மன்னனாகவும் ஆன்மாவை மன்னன் மகனாகவும் உருவகஞ் செய்யாததால், இது ஏகதேச உருவகம்.

ஏகதேசப்பொருள் - ஒரு பகுதி யாகிய பொருள்.

ஏகன் - உலக முதல்வன், பரம்பொருள். எ-டு ஏகனும் ஆகி அநேகனும் ஆனவன் (திஉ 5).

ஏகனாகி - ஒற்றுமைப்பட்டு.

ஏகனாகி ஒற்றுமைப்படுதல் - இதுபற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு சிவஞான முனிவர் எடுத்துக் காட்டுகிறார்.

"ஈண்டு ஏகனாகி ஒற்றுமைப் படுதலாவது"

1. குடிமுடைந்த வழிக் குடகாய மும் மகா காயமும் ஒன்றாதல் போல ஒற்றுமைப்படுதலா? 2. அன்றி, இப்பியை வெள்ளியென்பது போலத் திரிபுக் காட்சியால் ஒற்றுமைப்படுதலா? 3.அன்றி, மண்ணே குடம் என்பது போல ஒன்று திரிந்து ஒன்றாய் ஒற்றுமைப்படுதலா?

71