பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்து சுத்தி

ஐயைந்து வேறு



ஐந்து சுத்தி-சிவபூசைக்கு முன் செய்யப்படும் செயல். அதாவது, பூத சுத்தி, மந்திர சுத்தி, திரவிய சுத்தி, ஆன்ம சுத்தி, இலிங்க சுத்தி

ஐந்தொழில்-படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஒ. முத்தொழில்.

ஐந்து மலம் - ஆணவம்,கன்மம், மாயை, திரோதனம், மாமாயை.

'ஐம்புல வேடர் -ஐம்பொறிகள் வேடராகவும் ஆன்மா மன்னவன் மகனாகவும் உருவகம் செய்யப்படாமை.ஆகவே,இது ஏக தேச உருவகம் உணர்த்த, உணர்ந்து அரசகுமாரன்வேடர் சூழலை விட்டு நீங்கி அரசியல் சூழலை அடைந்து இன்புறுவது போல, உயிரும் ஐம்புலச் சூழலைவிட்டு நீங்கி முதல்வ னது திருவருட் சூழலை அடைந்து இன்புறும்.

"ஐம்புல வேடனின் அயர்ந் தனை வளர்ந்து எனத்” (சிபோநூபா8)

ஐம்புலன்கள் - ஒசை, ஊறு, உருவம் (ஒளி), சுவை, நாற்றம், அகங்காரத்தின் தாமதக் கூற்றிலிருந்து தோன்றுபவை. ஐம்புலனுக்கு வேறு பெயர் தன் மாத்திரை. -

ஐம்பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, விசும்பு.

ஐம்பெருங்காப்பியங்கள் - வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை.

ஐம்பெருங்குழு - அமைச்சர், அந்தணர், சேனாபதியர், தூதர், சாரணர். -

ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி வேறுபெயர் அறிவுப்பொறி, ஞனேந்திரியம், அகங்காரச் சத்துவக் கூற்றில் மனம் தோன்றியபின், இப்பொறிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும், பா. ஐம்புலன். -

ஐயம் - ஐயப்பாடு, துணிவு பிறாவாமை, பிச்சை,

ஐயக்காட்சி - காட்சி வகையில் ஒன்று. ஒரு பொருள் ஐயத்திற்குரிய நிலை. அது சிலையா மனிதனா என்று துணிய முடியாத நிலை.

ஐயடிகள் காடவர் கோன் நாயனார் - குறுநில மன்னர், காஞ்சிபுரம் - தொண்டை நாடு. சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபட்டு 11ஆம் திரு முறையில் சேத்திர வெண்பா பாடியவர், திருப்பணிகள் செய்தவர். இலிங்க வழிபாடு (63)

ஐயன் - கடவுள்.

ஐயா -ஐயனை, குருவே ஐயுறவுச் செயல் - அபேதம், பேதம், பேதா பேதம், பதம், பாழி.

ஐயைந்து-உயிரானதுமலவடிவில் மறைப்புறுவது. அப்பொழுது, நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் ஐந்து அவத்தைகளும் அவ்வவற்றிற்குரிய கருவிகளோடு தனித்து இயங்கி ஏற்ற இறக்கம் பெறுதலே ஐயைந்து ஆகும். செயற்படுங் கருவிகள் 35 (25+10)பா.அட்டவணை

ஐயைந்து வேறு - வேறாக நிற்கும், 25 கருவிகள். கனவில் தொழிற்படுபவை.

76