பக்கம்:சொன்னார்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115


அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்னும் பழமொழி சங்கீதத்திற்கும் பொருந்தும். சிவாலயத்திற்கு முன்னல் இருந்து நந்தனார் கைகூப்பித் தொழும்போது பக்தி வெள்ளத்தினால் இயற்கையாகவே பண்ணும் பாட்டும் ஊற்றெடுத்துப் பெருகுவதுபோலப் பெருகும். அவ்விடத்தில் பக்திரசமான பாட்டுக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாடக்கூடும். அதைவிட்டு நந்தனார் வேதியரிடத்தில் உத்தரவு கேட்பதும், வேதியர் அவருக்கு விடை கொடுப்பதும் பாட்டாகப் பாடினல் நாமும், நம் நாட்டு நாடகதிலே இன்னும் இப்படி இருக்கிறதே என்று ஒப்பாரிப் பாடிப் புலம்பவேண்டியிருக்கிறது. நந்தனர் சரித்திரம் மட்டும் இப்படி நடிப்பதாக நான் சொல்லவில்லை. அநேக நாடக சபைகளில் ’எல்லப்பச் செட்டி லெக்க ஏகலெக்க’ என்றபடி எல்லா நாடகங்களும் இவ்விதமாகத்தான் நடிக்கப்படுகின்றன. ’தருக்கம்’ ‘ஸ்பெஷல்’ என்று விளம்பரம் செய்யும் நாடக சபைகள் எத்தனையோ இருக்கின்றன. இவ்விதமான குறைகளை நீக்குவதற்கு தனலட்சுமி விலாச சபையாரைப் போன்ற சில கெளரவ சபையார் முன் வந்திருப்பது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.

—எஸ். எஸ். அருணகிரிநாத முதலியார் (1919)

(சென்னை புரசைத் தனலட்சுமி விலாச சமாஜத்தில்)


சினிமா என்றால் இப்போது பேச்சும் பாட்டும் கலந்த திரைப்படத்தைத்தான் குறிக்கும். நம் நாட்டில் அது ஒரு காலத்தில் பேசாத படமாக, வெறும் நிழலாட்டம் போல இருந்து பேசும் சக்தியைப் பெற்ற வருடம் 1931. அந்த வருடத்திலேதான் முதன் முதலில் இந்தி பேசும் ”ஆலம் ஆரா” என்னும் படமும், தமிழ் பேசும் ”காளிதாஸ்” என்ற படமும் வெளியாயின. அந்த முதல் தமிழ்ப்படமான ”காளிதாஸ்” கதையில் நடிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

—டி. பி. ராஜலட்சுமி (1-1-1957)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/117&oldid=1016076" இலிருந்து மீள்விக்கப்பட்டது