பக்கம்:சொன்னார்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118


இளமையில் கோழி வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. என் தாய் பலரகமான கோழிகளை வாங்கியளித்துப் பராமரிக்கக் கற்பித்து உற்சாக மூட்டி வந்தார்கள். மாதத் தொடக்கத்தில் தாயுடன் கடை வீதிக்குச் சென்று கோழிகளுக்கு வேண்டிய இரை வாங்கி வருவேன். முட்டைகளை விற்றுக் கணக்கு வைத்திருப்பேன். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் இதன் லாப நஷ்டக் கணக்கைத் தாய்க்கு அறிவிப்பேன். லாபத் தொகை தனியாக வைக்கப்பட்டு ஏதேனும் நல்ல காரியக்கிற்காகச் செலவிடப்படும். ஏழைப் பையன் ஒருவனின் பள்ளிச் சம்பளமாகவும் இது பயன்படுவதுண்டு.

—டாக்டர் ஜே. சி. குமரப்பா

நான் மேல் நாடுகள் சொல்லுவதற்கு முன் அங்கெல்லாம் நம்முடைய நாகரிகத்தைப் பற்றிக் கேவலமாகச் பேசுவார்கள், நம் நடனத்தைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அங்குச் சென்ற எனக்கு என் எண்ணம் தவறானது என்று தெரிந்தது. பதினாறு முழம் சேலையும், நீண்ட கூந்தலும் அவர்களுக்கு வெறுப்பை உண்டு பண்ணும் என்று எண்ணிய என்னை அவர்கள் ஏமாற்றி விட்டனர். சேலைகளையம், நீண்ட கூந்தலையும் வரவேற்றனர். அவர்கள் சேலைமீது கொண்ட மோகத்தினால் என் சேலைகள் சிலவற்றைப் பரிசாக வாங்கிச் சென்றனர். நீண்ட கூந்தலிலிருந்த கொஞ்சம் சாம்பிள் கத்தரித்துக் கொண்டு போனார்கள்.

—நடிகை வசுந்தராதேவி (1950)

கவிஞர் பாடும் பாட்டை ரசிகர்கள் கேட்டு கை தட்டுவதோடு மட்டும் நிற்காமல், விருப்பமான காசுகளைப் போட வேண்டும். கவிதை வளர்ச்சிக்கு இது ஒரு தூண்டு கோலாக இருப்பதோடு, மக்களுக்குக் கவிதையின் மேல் காதல் ஏற்படும். இது வேடிக்கையல்ல. இனி வாடிக்கையாக இம்முறையை மேற்கொள்ள வேண்டும்.

—கவிஞர் சுரதா (9-7-1971)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/120&oldid=1016083" இலிருந்து மீள்விக்கப்பட்டது