பக்கம்:சொன்னார்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119


எனக்கு எதாவது பொதுநிகழ்ச்சிகள் நினைவுக்கு வருமானால், புத்தர் இரவோடு மனைவியையும் பதவியையும் துறந்து வீட்டை விட்டுச் சென்றதும், ஏசுநாதர் தோளில் சிலுவை சுமந்து போனதும்தான் நினைவுக்கு வரும். இதை நான் கூற காரணம், பலர் எனக்கு மார்க்கத்தில் பற்று இல்லை என்று எண்ணுகிறார்கள். இந்தச் சம்பவங்களில் பற்று வைப்பவன் மார்க்கவாதி என்றால் நானும் மார்க்கவாதிதான்.

— அறிஞர் அண்ணா


ஒரு படம் வெளி வந்தால், உடனே அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றித் தமிழ் பயிலும் மாணவர்களும், முதிர்ந்த புலவர்களும், அப்பாடல்களைப் பற்றி விளக்கம் எழுதிச் சிறுசிறு புத்தகமாக வெளியிடும் பணியில் ஈடுபடு வார்களானல், அதன் மூலம் மக்களுக்கு விமரிசன வளர்ச்சி ஏற்படும்.

— கவிஞர் சுரதா (10.3-1958)


இன்று கச்சேரி செய்வது பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனல் நாங்கள் ஆரம்பித்த காலத்தில், உயர்குலப் பெண்கள் எல்லாம் செய்யக்கூடாத காரியம் இது என்றே கருதப்பட்டது. இந்த கலைக்கு உள்ள இந்தப் பெயரை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடேயே நாங்கள் முழுதாகப் பாடுபட்டோம்.

— டி. கே. பட்டம்மாள்


நம் நாட்டிலே படித்துப் பட்டம் பெற்றவர்களின் தொகை அதிகமாக இருக்கிறது. அவர்களினால் எந்தப் பயனும் இல்லை பட்டம் பெறுவோர்க்குத் தங்களுடைய தொழிற்சாகைளில் தாங்களே நேரடியாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. படித்துவிட்டுப் பட்டம் பெற்ற பெருமையோடு வேலையில்லாமல் இருப்பவர்களே தவிர, தொழிற்சாலைகளில் உழைக்கும் உளளம் அவர்களுக்கு உண்டாவதில்லை.

— தொழிலதிபர் நா. மகாலிங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/121&oldid=1016085" இலிருந்து மீள்விக்கப்பட்டது