பக்கம்:சொன்னார்கள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128


நான் சிறு பையனாக இருந்தபோது ‘கிரிக்கெட்’ விளையாடுவேன். அவ்விளையாட்டில் மிகவும் கெட்டிக்காரன் என்று எனக்குப் பெயரும் உண்டு. நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, வெயிலைக்கூட கவனியாமல் மத்யானம் சாப்பாட்டிற்காக விடும் அரைமணி நேரத்தில்கூட நாள்தோறும் விளையாடுவது வழக்கம்.

—தாதாபாய் நெளரோஜி (1901)

(காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)


நான் படவுலகில் முன்னுக்கு வர நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளே காரணம். அவர்தான் துணிந்து முதலாவதாகத் தம்முடைய பராசக்தி’ என்ற படத்தில் கதாநாயகனுக நடிக்க என்னை ஏற்பாடு செய்தார். எனக்குக் கூட அவருடைய துணிவுக்குத் தெம்பூட்ட முடியுமா என்ற கவலை உள்ளூர இருந்து வந்தது.

—நடிகர் சிவாஜிகணேசன் (1-1-1957)


ஆங்கிலேயரையடுத்து உறவாடாதிருந்த தமிழ்ச் சிங்கங்கள்; நல்லூர் ஆறுமுக நாவலர், மாயவரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வடலூர் இராமலிங்கப் பரதேசியார், திரிசிரபுரம் முத்து வீரக் கவிராயர். இவர்கள் கொஞ்சக் காலத்துக்கு முன்தான் தேகவியோகமாயினர். இச்சிங்கங்களிடம் கற்றுச் சொல்லிகளாயிருந்தவர்கள் இப்போது கலாசாலைகளில் தமிழ் முனிஷிகளாக இருக்கிறார்கள்.

—டேவிட் ஜோசப் (1897)

(ராஜமந்திரம் கல்லூரிப் பேராசிரியர்)


சமயப் படிப்பை ஆதரிப்பவர்களுள் நான் ஒருவன். டாக்டர் அன்னிபெசன்ட் தோற்றுவித்த கல்வி நிலையங்களில் நான் பயின்றவன். அங்கு சமயப் படிப்பு கட்டாய பாட்மாக இருந்து வந்தது. ஆகையால் சமய அறிவின் அவசியத்தை நான் நன்கறிவேன் இன்றும்அதன்தேவையை உணர்கிறேன்.

-ஸ்ரீபிரகாசா (27-10-1956)

(முன்னாள் தமிழக ஆளுநர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/130&oldid=1016102" இலிருந்து மீள்விக்கப்பட்டது