பக்கம்:சொன்னார்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13



எட்டய புரத்திலிருந்து சில மைல் தொலைவிலுள்ள கோவிற்பட்டிப் புகைவண்டி நிலையத்திற்கு நானும், விஸ்வநாத பாரதி என்ற இளைஞரும் பாரதியாருடன் நடந்து சென்றோம். கோவிற்பட்டி நிலையத்திற்கு அருகே மாலைப் பொழுதில் கடைத்தெருவில் பூமாலைகள் விற்றார்கள். பாரதியார் மூன்று பூமாலைகளை வாங்கி தமது கழுத்திலே தாமே ஒன்றைப் போட்டுக்கொண்டு, எனது கழுத்திலும், இப்பொழுது காலஞ்சென்று விட்ட விஸ்வநாத பாரதி கழுத்திலும் ஒரு மாலையைப் போட்டார். அப்பொழுது எங்கள் உள்ளத்தில் தோன்றிய உவகையையும் பெருமையையும் சொல்லவேண்டுமா?

—பரலி சு. நெல்லையப்பர் (1919)

அக்காலத்து இஸ்லாமியப் பெண்கள், கல்வியிலும் மற்றும் பல விஷயங்களிலும், உலகத்திலுள்ள மற்றெல்லாப் பெண்களைவிடப் பன்மடங்கு மேலானவர்களாகத்தானிருந்தார்கள். அவர்களுக்கு அக்காலத்திலிருந்த உரிமைகள் மற்றெவருக்கும் இருந்ததில்லை. பெண்களுக்குக் கருத்துச் சுதந்தரமும், செயல்களில் சுதந்தரமும் வழங்கியது இஸ்லாமொன்றுதான்.பொதுமக்களின் பிரதிநிதியைத்தேர்ந்தெடுப்பதான "பயத்' முறையிலும் இன்றைக்கு 1346-வருடங்களுக்கு முன்பே முஸ்லீம் பெண்களுக்கும் ஒட்டுரிமை இருந்தது. அத்தகைய உரிமைக்குத்தான் ஐரோப்பிய பெண்கள் இன்றைக்கும் கடும்போர் புரிந்து வருகின்றனர். நான் :எழுதியிருக்கும் இஸ்லாமும் பெண்களும் என்னும் புத்தகம் மதசம்பந்தமாகப் பெண்களின் உண்மையான நிலைமையை நன்கு விளக்கித் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயத்தையும் ஒழிக்க உதவியாகக் கூடுமென்று நம்புகிறேன். நான் அப்புத்தகத்தைப் பாரசீகத்தில் எழுதியிருப்பதால் அதனைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

—ஆப்கன் அரசி செளரியா (2-6–1928)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/15&oldid=1010342" இலிருந்து மீள்விக்கப்பட்டது