பக்கம்:சொன்னார்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27



பிறர் தம்மைப்பற்றிப் பேசுவதையே நான் எப்பொழுதும் கேட்க விரும்புகிறேன். அப்பொழுதுதான் நான் சதா நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க முடிகிறது.

—வில் ரோஜர்ஸ்

தற்போது கவர்ன்மெண்டார் அனுஷ்டித்து வரும் இராணுவ முறையை, எங்கள் நலனை யுத்தேசித்தே நாங்கள் கண்டிக்கிறோம். பிரபுவாகட்டும், பக்கிரியாகட்டும், வீரச் செயல்களைச் செய்யவும், மனிதர்களைச் சூரர்களாக்கவும்: மனிதர்களுக்கு அப்பெயரைப் பொருந்தச் செய்யவும், காரணமாயுள்ள தன்னம்பிக்கையை நாம் இழந்து வருறோம். நான் 5-வயது குழந்தையாயிருக்கும் பொழுதே என் பாட்டனார் யுத்தப் பயிற்சியை எனக்குக் கற்பித்தார். ஐம்பது வாருஷத்திற்கு முன் ஒவ்வொரு இளைஞனும் சமயம் ஏற்படும் பொழுது யுத்தத்தில் தன் புஜபல பராக்கிரமத்தைக் காட்ட அவாக் கொண்டிருந்தான். ஆனால் அதை நினைக்க என் உள்ளத்தில் நானா வித மனோ எழுச்சிகள் தோன்று கின்றன. மனிதர்கள் யுத்த வீரர்களாக வேண்டுமானல் கஷ்டகாலம் நேரிடும் சமயத்தில் எந்த வேலைக்கும் நாம் தயாராயிருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் அம்மாதிரியான சம்பவம் நேரிடும். நமக்கு ஆரம்ப முதல் யுத்தப் பயிற்சி வேண்டும். நம் தகப்பன் பாட்டன் ஏனேயோர் சண்டை செய்வதைப் பார்க்கவும், அவர்களோடு கலந்து கொள்ளவும் வேண்டும்.

—ராஜாராம்பல் சிங்கு
(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மகாநாட்டில்)

தீர்க்க தரிசியாய் இருப்பவர்கள் தமக்கு உண்மை எனத் தோன்றியதைக் கடைசி வரையில் தாம் கல்லால் அடிக்கப்பட்டு சாக நேரிட்டாலும் கடைப்பிடிக்கலாம். ஆனால் நாட்டுத் தலைவனாக இருப்பவன் பல நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

—நேரு (17-6-1962)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/29&oldid=1065023" இலிருந்து மீள்விக்கப்பட்டது