பக்கம்:சொன்னார்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையும், என்னை எல்லாவிதத்திலும் புதிய மனிதனாக மாற்றுகின்றன. வறுமை, அன்பு, அதிகாரம், கோபம், நோய், துயரம், வெற்றி எல்லாம் என் மனத்தில் புதைத்து கிடக்கும் பல்வேறு சக்திகளை வெளிக்கொணர்கின்றன. இவைகளினால் எனது அற்ப ஆசைகள் பாதிக்கப் பட்டாலும் எனது மனோசக்தி பெருகுவது தடைப்படுவதில்லை.

—கவிஞர் எமர்சன்

நானே பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்தான். பணம் கட்ட வசதியின்றி உபகாரச் சம்பளம் பெற்றுத்தான் படித்தேன். ஆகவே, பணம் கட்டிப் படிப்பதில் உள்ள கஷ்டம் எனக்குத் தெரியும்.

—அறிஞர் அண்ணா (23-3-1967)

இலக்கியத்தை நான் கற்றேன் இல்லை. நான் நினைத்ததைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எனது மொழி எனக்கு உதவவேண்டும். அதுவரையில் எனது மொழியறிவு எனக்கு உதவுகிறது என்று நம்புகிறேன்.

—எம். ஜி. ஆர். (23-12-1975)

முன்பெல்லாம் யோசனை சொல்வதற்காகச் சிலரும், அதைக் கேட்பதற்காகப் பலரும் இருந்தார்கள். அதனால் யோசனை சொல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தன. ஆனால், இப்போதைய நிலைமை அப்படியில்லை. நேர்மாறாகப் போய்விட்டது. யோசனைகளைத் தேடி, நாம் எங்கும் போக வேண்டியதில்லை. நம் இருப்பிடம் தேடித் தாமாக யோசனைகள் அடுக்கடுக்காய் வந்து குவியும் நாள் இது.

—அகிலன்

உண்மை என் உடலில் ஊறிக் கிடக்கிறது. என்னிடமிருந்து அதனை எதனாலும் அகற்றிவிட முடியாது.

—காந்தியடிகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/34&oldid=1013142" இலிருந்து மீள்விக்கப்பட்டது