பக்கம்:சொன்னார்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83


எனது ஊரில் இருந்து சினிமா பார்க்க மதுராந்தகமோ, அல்லது செங்கல்பட்டுக்கோ தான் வரவேண்டும். இரவோடு இரவாக சைக்கிளில் வந்துவிட்டு, இரவு காட்சியும் பார்த்தவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டில் வந்து படுத்துக் கொள்வேன். பார்த்த படம் பற்றியும், அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு பற்றியும் என் எண்ணம் எல்லாம் ஓடிக் கொண்டு இருக்கும். உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டு இருக்கும்போதே, நாடகக்கதை ஆசிரியன் ஆகி சினிமா உலகுக்கு வந்தேன்.

—ஸ்ரீதர், திரைப்பட இயக்குநர் (14-1-1969)


என்னுடைய முடிவான கருத்து என்னவென்றால் திறமை முதல் தேவையுமில்லை. இரண்டாம் தேவையுமில்லை மூன்றாம் தேவையுமில்லை. திறமை என்பதே அடியோடு தேவையில்லை என்பதுதான். திறமையுடையவர்களை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, திறமையற்றவர்களை மட்டுமே கல்லூரிகளிற் சேர்த்துப் படிக்கும்படிச் செய்ய வேண்டும். அப்போதுதான் கையும் காலும் சூம்பிப்போய், வயிறு மட்டும் பெருத்து வலுக்குறைந்து வாடியிருக்கும் தமிழ் நாடு வலுவடைய முடியும். திறமையற்றவர் களைத் திறமையுடையவர்களாகச் செய்வதுதான் கல்லூரிகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும். அதாவது செய்ய இப்போதுள்ள கல்லூரிகளுக்குத் திறமையில்லாவிடில் அக் கல்லூரிகளை இடித்துத் தூளாக்கிவிட அரசாங்கம் உத்திரவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், கட்டிடங்களிலிருந்த நிலத்தில் கலக்கம்பாவது விளையும். உணவு நெருக்கடியான இக்காலத்தில் அது அதிக விளைவுக்கும் துணை செய்வதாகவுமிருக்கும்.

—கி. ஆ. பெ. விசுவநாதம்

1964 அல்லது 1965-ம் ஆண்டில் ஓய்வு பெற்று, ஐதராபாத்திலோ அல்லது வடக்கே எங்காவது ‘செட்டில்’ ஆகவேண்டும் என்றிருக்கிறேன்.

—கண்ணதாசன் (22-11-1962)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/85&oldid=1015927" இலிருந்து மீள்விக்கப்பட்டது