பக்கம்:சொன்னார்கள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


எனது பொதுத் தொண்டு வாழ்வில், நான் நெருங்கி உண்மையாகப் பழகிய தோழர்கள், அண்ணாதுரை, ராஜாஜி, கண்ணப்பர், ராமநாதன், கே. ஏ. பி. விசுவநாதன், பொன்னம்பலம், சவுந்தர பாண்டியன், பி. பாலசுப்பிரமணியம், குருசாமி ஆகியவர்கள்தான்.

— பெரியார் (19-9-1962)


மிக ஆழ்ந்து படிந்துவிட்ட சமூகத் தீமைகளை வெறும் சட்டத்தால் நீக்கிவிட முடியாது. என்றாலும், அப்போதுதான் எடுத்துக் கொண்ட நோக்கத்திற்கு ஒருவேகம் கிடைக்கும்.

—நேரு (6-5-1961)


மனிதர்களுக்காகக் குதிரையா? குதிரைகளுக்காக மனிதர்களா? மனிதர்களின் வாழ்வும் பணமும் குதிரைப் பந்தயத்திஞல் வீணாகக் கூடாது!

—அண்ணா (8-3-1967)


நான் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பாடிவிட்டேன். இன்றுள்ள பிரபல நடிகர்கள் எல்லோருக்கும் பாடிவிட்டேன். அதில் அமுதும் தேனும் எதற்கு? என்ற பாட்டே சிறந்தது. இந்தப் பாடல் கவிஞர் சுரதா எழுதியது.

— சீர்காழி கோவிந்தராஜன்


மொகலாயர்கள் தங்களுடைய ஞாபகார்த்தமாக தாஜ்மகாலைத் தவிர வேறெதையும் வைத்துவிட்டுப் போகாமல் போனலும், நான் அவர்களுக்காக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல் பிரிட்டிஷார் தங்களுடைய அரசாட்சி முடிந்தபின் என்ன வைத்துவிட்டுப் போவார்கள் என்றால், சிறைச்சாலையைத் தவிர வேறொன்றுமில்லை

— சுபாஷ் சந்திரபோஸ் (20-5-1928)

(பம்பாயில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/93&oldid=1015979" இலிருந்து மீள்விக்கப்பட்டது