பக்கம்:சொன்னார்கள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93


எல்லாம் தெரியும், இனி உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களை விட, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய அறிஞர்களால் நாடு அதிக பலன் அடைகிறது.

— சம்பத் (8-3-1962)


நல்ல ஆட்கள் பதவிக்கு வரமுடியவில்லை என்றால். பதவிக்குத் தேர்ந்தெடுத்தனுப்பும் ஓட்டர்களுக்குப் புத்தியில்லை. அல்லது புத்தியுள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லே என்றுதான் அர்த்தம்.

—ஈ. வெ. ரா. பெரியார்


புரட்சி வரும் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை தான், ஆட்சியிலிருப்பவர்கள், வாயளவில் சோஷலிசம் என்றும் முற்போக்கு என்றும் பேசிக்கொண்டேயிருந்தால்—காரியமாற்றாமல் காலங் கடத்தினால் புரட்சி வரத்தான் செய்யும்.

— காமராசர் (17-10-1970)


குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருவகை தாய்மார்கள் உண்டு. நினைத்து பால் ஊட்டும் தாய் ஒருவகை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தாய் இன்னொருவகை. தாய்மொழி விஷயத்தில் அழுதப் பிள்ளைக்குப் பால் கிடைக்கும் நிலை இருக்கிறது. அழுதால்தான் பால் கிடைக்கும்.

— ம.பொ. சி. (17-3-1963)


மற்றவங்களைச் சின்னவங்களா நான் நினைக்கமாட்டேன். ஆனல் நான் என்கிற செருக்கு எனக்கு என்னைக்குமே உண்டு. எங்காவது ஃபங்ஷக்குப் போனல்கூட எனக்கு ஃப்ரன்ட்சீட் கொடுக்கவில்லை என்றால் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு எழுந்து வந்துவிடுவேன். இரண்டாந்தரமா இருக்கிற காம்ப்ளெக்ஸ் எனக்குக் கிடையாது.

— திரைப்படத் தயாரிப்பாளர் ஜி. உமாபதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/95&oldid=1015982" இலிருந்து மீள்விக்கப்பட்டது