பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

127



1922-ம் ஆண்டிலே கூடலூர் சிறைச்சாலைக்கு கல்கியை மேற்படி துரைமகனார் அனுப்பி வைக்கப் போக, அங்கே கம்மா இருப்பதற்கு முடியாமல் கல்கி தமிழ் எழுத ஆரம்பிக்க, பின்னர் தமிழும் கல்கியும் ஓருயிரும் ஈருடலுமாகி, தமிழ் என்றால் கல்கி-கல்கி என்றால் தமிழ் என்பது போன்ற பொய்யா மொழிகளும் உண்டாகி விட்டன.

தமிழ் வாழ்க! அதை வாழ்விக்க வழிசெய்த வாரன் துரை மகனாரும் வாழ்க என்று வாழ்த்துவோமாக!

கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்படைத்த தமிழ்நாடு என்றும், தமிழ் நாட்டின் பெருமைகளைப் பலர் பலவிதமாகச் சொல்லிப் பாராட்டி மகிழ்கிறார்கள்.

“கல்கி பிறந்த தமிழ்நாடு” என்று சொன்னாலும் மிகையாகாது. ஏனெனில் கம்பரும், வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், கல்கியின் உருவத்தில் தமிழ்நாட்டில் உலாவுகிறார்கள். ஆகவே கல்கி பிறந்த தமிழ் நாடு என்று கூறுவதுதான் சரி.

என் பேச்சு முடிந்ததும் சபை மகிழ்ச்சியில் திளைத்தது. பலர் மேடைக்கு வந்து கைழுலுக்கினார்கள். சிலர் மாலை அணி வித்தார்கள். ஒரு பெண்மணி ஒரு டாலருடன் கூடிய தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசாக அளித்தார்.

உடனே பெண்மணிக்கு நன்றி தெரிவித்து விட்டு, “கல்கியைப் பற்றி நான் பேசியதற்குக் கிடைத்தது இந்தப் பரிசு. இதை நான் கல்கி அவர்கள் சேர்க்கும் பாரதி மண்டப நிதிக்கு அளிக்கிறேன்.