பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

128



இதை கல்கி அவர்களே ஏலத்திற்கு விட்டு, கிடைக்கும் பணத்தை நிதியில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்", என்று சொல்லி பலத்த கரகோஷத்துக்கிடையில் கல்கி அவர்களிடம் மேற்படி தங்கச் சங்கிலியைக் கொடுத்தேன்.

கல்கி அவர்களும் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த சிறிய சொற்பொழிவு ஒன்றைச் செய்து மேற்படி தங்கச் சங்கிலியை ஏலத்துக்கு விட்டார். சங்கிலி எவ்வளவு தொகைக்கு ஏலம் போயிற்று என்று நம்புகிறீர்கள்?

சொன்னால் நம்பமாட்டீர்கள். ரூபாய் ஐயாயிரத்துக்கு ஏலம் போயிற்று. அதைவிட அதிசயம் ஏலம் கேட்ட மற்றவர்களும் எங்களுக்குச் சங்கிலி மேல் ஆசையில்லை. பாரதி நிதிக்கு நாங்களும் பணம் தருகிறோம் என்று கூறித் தாங்கள் கேட்ட ஏலத்தொகையை அவரவர்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதையும் சேர்த்து மொத்தத்தொகை ரூ.9780 சேர்ந்தது.

கல்கத்தா தமிழர்களின் பாரதி பக்தியைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்.