பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

131



நானும் மரியாதையாக அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டேன். விழா முடிந்தது. கல்கத்தாதிரும்பும்போது ராஜாஜி அவர்களிடம் நான், “என்னை எதற்குப் பேசும்படி பணித்தீர்கள். ரசிகமணி டி.கே.சி. பேசினால் போதாதா?” என்றேன்.

அதற்கு ராஜாஜி “ரசிகமணி ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. ஆகவே நம் தமிழ் மொழியை வங்காளிகள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் உங்களைப் பேசச் சொன்னது” என்று சொல்லிய பிறகு சிறிது மெளனமாக இருந்து விட்டு, “நானே உங்களுக்கு மாலை போட்டது ஏன் தெரியுமா?” என்ற் கேள்வியும் போட்டு பதிலையும் சொன்னார்.

“உங்களை இங்கு ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் பேசும்போது யாரோ என்று அசிரத்தையாக வங்காளிகள் இருந்துவிட்டால் உங்கள் தமிழை யாரும் கவனித்துக் கேட்க முடியாது.

நான் மதித்து மாலை போடக்கூடிய ஆள் என்று தெரிந்து விட்டால் எல்லோரும் கவனமாகக் கேட்பார்கள் அல்லவா? அதற்காகத்தான்” என்று கூறினார்.

ராஜாஜியின் பெருந்தன்மையை நினைத்து உருகிப் போனேன்.