பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

133



அதனால் ஒரு ‘வாழ்த்துக் கவிதை எழுதி, என்னை மாநாட்டுச் செயலாளரிடம் கொடுக்கும்படி எழுதியிருந்தார். அதன்படி கொடுக்க நான் மாநாட்டுக்குச் சென்றேன். செயலாளர் என்னை மிக்க அன்புடன் வரவேற்று முதல் வரிசையில் உட்கார வைத்தார்.

சிறிது நேரத்தில் மாநாட்டுச் செயலாளரும் வேறு சிலரும் என்னிடம் வந்து, “நாமக்கல் கவிஞர் வர இயலாததினால் மாநாட்டை தாங்கள் துவக்கி வைக்க வேண்டும்” என்று கேட்டார்கள்.

நான் சொன்னேன், “உங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் தொல்காப்பியத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் வேறு யாராவது விஷயம் தெரிந்தவர்களைத் துவக்கி வைக்கச் சொல்லுங்கள்“

எனது பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

உங்களுக்குத் தெரியாத விஷயம் உலகில் உண்டா? அடக்கம் காரணமாக தாங்கள் மறுக்க வேண்டாம். தாங்கள்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள்.

உண்மையிலேயே தொல்காப்பியம் என்ற பெயர் தெரியுமே ஒழிய அதன் உள்விவரங்கள் எனக்கொன்றும் தெரியாது. ஆயினும் நான் எல்லாம் தெரிந்தவன் என்று நினைப்பவர்கள் மத்தியில் வேறு என்ன செய்ய முடியும்?

தொல்காப்பிய மாநாட்டை துவக்கி வைக்க எழுந்தேன். மாலை, மரியாதை வரவேற்பு பாராட்டு புகழுரை இவைகள் முடிந்ததும் பேசலானேன்.