பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

சொன்னால் நம்பமாட்டீர்கள்



இருவரும் கூட்டத்திற்குச் சென்றோம். சுமார் 3000 பேர் கூடியிருந்தனர். பிரார்த்தனை முடிந்ததும் ஏற்கெனவே நாங்கள் திட்டமிட்டபடி கலைவாணர் என்.எஸ்.கே. பேசினார். அரைமணி நேரம் மிக உருக்கமாகப் பேசினார். இயற்கையாக அவருக்குள்ள நகைச்சுவையும் ஆங்காங்கே வெளிப்பட்டது.

அவர்பேசி முடிந்ததும் கண் மூடிக்கண் திறப்பதற்குள் நான் எழுந்து கம்பீரமான குரலில் “சங்கநாதம் கேட்குது, சாந்த காந்தி சத்தியத்தின் சங்க நாதம் கேட்குது” என்று பாட ஆரம்பித்தேன்.

எதிர்பாராதவிதமாக இப்படி நான் திடீரென்று பாட ஆரம்பித்ததும் சபை அப்படியே நிசப்தமாகி வெகு கூர்மையுடன் என் பாட்டை கேட்டுக் கொண்டிருந்தது. பாட்டுப் பாடி முடிய பத்து நிமிடங்கள் ஆயின. பாட்டு முடிந்ததும் பலத்த கரகோஷம், அடுத்த வினாடிமக்களைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேட்டேன்.

உங்களில் யார் யார், காந்தி பக்தர்கள் தயவு செய்து கையைத் தூக்குங்கள் பார்க்கலாம் என்றேன். அனைவரும் கை தூக்கினார்கள். அப்படியானால் காந்தியடிகள் பிரார்த்தனை செய்தது போல் நாமும் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாமா? என்று கேட்டேன். அனைவரும் ஒரே குரலில் சரியென்றார்கள், ரகுபதிராகவ ராஜாராம் பிரார்த்தனை பத்து நிமிடம் நடத்தினேன்.

அதன் பின்னர், மக்களிடம் சொன்னேன், “கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார். அதைப் போலவே நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள். அதனால் நான் அவரிடம் சொன்னேன்.

நீங்கள் முதலில் பேசிவிட்டால் மக்கள் கலைந்து விடுவார்கள். ஆகவே நான் முதலில் பேசி விடுகிறேன். என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், நீங்கள் நினைப்பது தவறு.