பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

165



திரு. சிவசண்முகம்பிள்ளை ராஜாஜியிடம் விடைபெற்றுக் கொண்டு போன பிறகு, ராஜாஜி என்னைப் பார்த்து “பார்த்தீர்களா? சிவசண்முகம்பிள்ளை “நான் ஒரு ஹரிஜன், ஆகையால் சபாநாயகர் பதவியை எனக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பலவீனமான பதிலைச் சொல்லாமல், ‘எனக்குச் சபை நடத்திய அனுபவமிருக்கிறது.

ஆகையால் நான் அதிகத் தகுதியுடையவன்’ என்று கூறினார். சரியான பதிலைச் சொல்லுகிறாரா என்று பார்ப்பதற்காகவே மேற்படிக் கேள்வியைக் கேட்டேன்.

ஹரிஜன் வகுப்பைச் சேர்ந்தவர்களானாலும் சரி, வேறு யாராகயிருந்தாலும் சரி. இப்படித்தான் தங்கள் தகுதியில் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்;

திரு. சிவ சண்முகம்பிள்ளை உண்மையான ஹரிஜனத் தலைவர்; சட்டசபையையும் நன்றாய் நடத்துவார்,” என்று சொன்னார். அவர் சொல்லியபடியே திரு. சிவசண்முகம் சிறந்த சபாநாயகராக விளங்கிப் புகழ் பெற்றார்.