170
சொன்னால் நம்பமாட்டீர்கள்
திரு. சிவசண்முகம் பிள்ளையையும் தன் அருகிலேயே இருக்கும்படி செய்தார்.
பரீட்சை முடிந்தவுடன் மேற்படி அதிகாரி, “மற்ற தகுதியெல்லாம் இருக்கிறது; ஆனால் ஆள் ரொம்பவும் மெலிவாக இருக்கிறார். போலீஸ் உத்தியோகத்திற்கு ஆள் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டும்” என்றார்.
அதற்கு ராஜாஜி “இவர் ஏழை ஹரிஜன் இளைஞர். இதுவரை சரியான சாப்பாடே இவருக்குக் கிடைத்திராது. ஆகையால் இப்படி மெலிந்திருக்கிறார்.
உத்யோகத்தைக் கொடுத்தால் சந்தோஷத்தினாலேயே சீக்கிரம் பருத்து விடுவார்,” என்று கூறியதும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் “சரி” என்று சொல்லி, அந்த ஹரிஜன் இளைஞருக்கு வேலையைக் கொடுத்தார்.
ராஜாஜி சொன்னது போலவேதான் நடந்தது. மேற்படி இளைஞர் உத்யோகம் ஏற்றுக் கொண்ட ஆறுமாதத்திற்குள் கட்டி பிடிக்க முடியாதபடி பருத்துப் போய்விட்டார். மிகத் திறமையான போலீஸ் ஆபீசராக, இப்போதும் பணியாற்றி வருகிறார்.
அவர்தான் சென்னை நகரின்போலீஸ் கமிஷனராக இருந்த திரு. சிங்காரவேலு அவர்கள்.