பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

173



பம்பாயில் மலபார் ஹில்ஸ் ‘நாஸ் ஓட்டல்’ வைத்திருக்கும் ஒரு பெரிய செல்வந்தர் மல்யுத்தப் போட்டி காண்டராக்ட் எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்.

அவரிடம் கிங்காங் என்னை அறிமுகப்படுத்தி “இவரை சாமான்யமாக நினைக்க வேண்டாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே அவர்தான் இவர். பெரிய விளம்பர மாக்னெட்” என்று சொன்னார்.

“உங்கள் திறமையைச் சோதிக்க விரும்புகிறேன்” என்று கூறிய நாஸ் “பம்பாய் இந்தியாவிலேயே மிகப் பெரிய நகரம். செல்வம் புரளும் நகரம். படேல் ஸ்டேடியத்தில் மக்கள் முக்கால்வாசி நிறைந்தால் கூட நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வசூல் ஆகும்.

இதுவரை ஒருநாள் கூட வசூல் 2 லட்சத்தை எட்டவில்லை. வரும் ஞாயிறு அன்று கிங்காங் தாராசிங் மல்யுத்தம் நடைபெறப்போகிறது. இதுதான் போட்டியிலே பெரிய போட்டி.

இதில் வசூல் ஆகும் பணத்தின் அளவைப் பொறுத்துத்தான் தொடர்ந்து மல்யுத்தப்போட்டி நடத்துவதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

ஆகவே அன்று பெரிய வசூலுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்று கேட்டார் நாஸ்.

“எவ்வளவு வசூல் ஆக வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்“ என்று கேட்டேன். “குறைந்தது மூன்று லட்சம் ரூபாயாவது வசூல் ஆக வேண்டும்” என்றார் முயற்சிக்கிறேன். எனது வழி கொஞ்சம் மாறுபட்டது.

அதற்கு ஆகும் செலவைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றேன். சரி என்றார் நாஸ்.