பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சொன்னால் நம்பமாட்டீர்கள்



என் இரண்டாவது சகோதரர் திரு. அழகப்பன் திருமணமாகிச் சில நாட்களில் இறந்துபோனார். அவர் இறந்து சில நாட்களில் அவரது மனைவியும் இறந்து போனாள். என் தம்பி இராமநாதனுக்கு ஒரு புதல்வி பிறந்தாள். அத்துடன் அவனும் இறந்து போனான்.

பாட்டியின் சாபம் பலித்ததென்று சொல்லாமல் இதற்கு வேறு என்ன காரணம் சொல்லமுடியும்?

நான்கு சகோதரர் பிறந்த வீட்டில் நான் சுவீகாரம் சென்றேன். மற்ற மூன்று சகோதரர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த வீட்டிற்கு ஆண் வாரிசு வேண்டுமென்று எனது பெரிய சகோதரர் திரு. சுப்பையா செட்டியார் அவர்களுக்கு மட்டும் இப்போது ஒரு பையனை சுவீகாரம் செய்திருக்கிறது.