பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

சொன்னால் நம்பமாட்டீர்கள்



அதன் பிறகு நான் ஒரு நாள் திரு. சண்முக அண்ணாச்சி அவர்களிடம் சென்று படம் தான் முடிந்துவிட்டதே. “தங்களின் ஒத்துழைப்பை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். இப்போதாவது சொல்லுங்கள் எவ்வளவு பணம் வேண்டும்” என்று கேட்டேன்.

உடனே அண்ணாச்சி சண்முகம் அவர்கள் சொன்னதைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்,

“நான் பெரிய பணக்காரன் அல்ல. எனக்கு பணம் தேவைதான், ஆயினும் நீங்கள் கொடுத்த வேடம் என் மனதிற்கு மிகவும் பிடித்த வேடம்.

நமது கொள்கையைப் பரப்புவதற்கு நீங்கள் செலவு செய்து சினிமா எடுத்திருக்கிறீர்கள்.

இதில் என் பங்கும் இருக்கிறது என்ற ஒன்றே எனக்குக் கோடி கொடுத்தாற்போல ஆகவே எனக்குப் பணம் வேண்டாம்” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.