பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சொன்னால் நம்பமாட்டீர்கள்


வேண்டியதுதான்” என்றேன். அப்படியானால் இன்றிலிருந்து நீ கதர் கட்ட வேண்டும்” என்றார். “சரி கட்டுகிறேன்” என்றேன். இன்று மாலையில் நடக்கும் அரசியல் மாநாட்டுக்கு வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.

நான் அன்று மாலையில் நடந்த அரசியல் மாநாட்டுக்குச் சென்றேன். திரு. சத்யமூர்த்தி என்னைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.

என்னையும் மாநாட்டில் பேசுவோர் பட்டியலில் சேர்த்திருந்தார் திரு. சத்யமூர்த்தி. மாநாட்டில் என் பேச்சு ரொம்ப நன்றாக அமைந்தது. தலைவர் சத்யமூர்த்தி எழுந்து என்னை மனதாரப் பாராட்டி என் நாவன்மையைப் புகழ்ந்தார்.

அவர் பேசிய தமிழ்-தோரணை-உச்சரிப்பு-விஷய அழுத்தம்- கணீர் என்ற குரல்-இவையனைத்தும் என்னை மெய்மறக்கச்செய்தன. தன் பேச்சு முடிவில் தலைவர் சத்யமூர்த்தி அவர்கள் என்னை நோக்கி, “இன்று முதல் நீ கதரே கட்ட வேண்டும். காங்கிரஸ் உறுப்பினராக வேண்டும். உன் சேவை நம்நாட்டுக்கு ரொம்பத் தேவை” என்று கூறி தான் அணிந்திருந்த காவி கலர் அங்கவஸ்திரம் ஒன்றைச்சபையின் கரகோஷத்துடன் எனக்குப் போர்த்தினார்.

என் உடம்பில் முதலில் பட்ட கதர் துணி காவிக்கலர் துணியே. அதுவும் சத்யமூர்த்தி அவர்களால் அணிவிக்கப் பட்டதாகும். அந்தப் பெரும் பாக்யத்தை நான் என்றும் மறக்கமாட்டேன். அந்தநினைவாகவே நான் என்றும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிகிறேன்.