பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அணாணாமலை

39



இவ்வளவு நடந்தும் “ஏன்” என்று கேட்பார் யாரும் இல்லை. அங்கு நின்ற ஊர்மக்கள், உறவினர்கள் அனைவரும் ஊமையராய், செவிடர்களாய்-குருடர்களாய் நின்று கொண்டிருந்தார்கள்.

போலீசார் என் கையில் விலங்கை மாட்டி ஒரு சங்கிலியால் அதைப் பிணைத்து நாயை இழுத்துக் கொண்டு செல்வதுபோல் என்னை கொண்டு சென்றார்கள். அப்போது அந்த இன்ஸ்பெக்டர் “புண்யவான்” சொன்னார்.

இவனைக்கடைவீதி வழியாக நாலுபேர் பார்க்க இழுத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் ஊரில் மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். இந்த மாதிரி இனி எந்தப் பயலும் காங்கிரஸ் கீங்கிரஸ் என்று வாலாட்ட மாட்டான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிச் சென்று என்னை எச்சரிக்கை செய்து விடுதலை செய்து விட்டார்கள். இந்தச் சம்பவத்தின்மூலம் என்னைப் பற்றி ஊரில் பலருக்குத் தெரிய ஆரம்பித்தது. பலர் இதைப் பற்றி ரகசியமாகப் பேசினார்கள். சிலர் தைரியமாக வெளிப்படையாகவும் பேசினார்கள்.

இதற்குப் பிறகு சில இளைஞர்கள் என்னுடன் நட்புக் கொண்டார்கள். அவர்களும் கதர் கட்ட ஆரம்பித்தார்கள்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் என் முதல் கூட்டம் ஏழு பேரைவைத்து ஆரம்பித்தேன். அதுவே பின்னர் ஏழுநூறாயிற்று. ஏழு ஆயிரமாயிற்று. இப்படி என் அனுபவத்தில் எழுபதாயிரம் மக்கள் கூடிய கூட்டத்திலும் நான் பேசியிருக்கிறேன்.