பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

49


திக்கு முக்காடச் செய்து விட்டது. அதிலிருந்து ரசிகமணி டி.கே.சியின் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிவிட்டேன்.

பிறகு இரண்டு மூன்று தினங்கள் காரைக்குடியிலேயே தங்கியிருந்து ஸ்ரீ டி.கே.சியின் பிரசங்கங்களைக் கேட்டு அனுபவித்தேன்.

கடைசி நாளன்று டி.கே.சியை நெருங்கி பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, தாங்கள் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு ரசிகமணி அவர்கள் ஆம் இதயஒலி என்ற புத்தகம் ஒன்றை நண்பர்கள் பிரசுரித்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

உடனே எனக்கு அப்புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அப்போது எனக்கு பால்ய வயது. ஸ்ரீ டி.கே.சி. அவர்களின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் வசதியற்றவனாயிருந்தேன். ஆயினும் எனக்கென்று ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என்ற ஆசைவிட்ட பாடில்லை.

நான் அப்போது, காரைக்குடி திரு.சா.கணேசன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன் அவரிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்ற விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும். எனவே, ‘இதயஒலி'யும் இருக்கத்தான் வேண்டும் என்று எண்ணி அவரது புத்தக சாலையை சோதனை போட்டேன். என் முயற்சி வீண் போகவில்லை. இதய ஒலி கிடைத்தது!

எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்லி முடியாது ! ஒன்றிரண்டு பக்கம் வாசித்தேன். ஸ்ரீடி.கே.சியே நேரில் வந்து நின்று கொண்டு முகத்தில் புன்னகை தவழப் பேசுவதுபோல் இருந்தது. அந்தப் புத்தகத்தைவிட்டு பிரிய மனம் வரவில்லை. வேறு புத்தகம் வாங்கவும் வசதி இல்லை. என்ன செய்யலாம்? வேறு என்ன இருக்கிறது செய்வதற்கு?

சொ.ந.-4