பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சொன்னால் நம்பமாட்டீர்கள்



இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக் கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ ‘இராமவிலாஸ்’ பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும், பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடானை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.

திருவாடானையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி மக்கள் கும்பல்கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கடைகள் அனைத்தையும் மூடும்படியும் செய்து போலீலைத் திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.

என்னை ஏற்றிக் கொண்டு சென்ற இராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்துகொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸை சாம்பலாக்கி விட்டார்கள். அதன் பின்னர் தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக்கூடாது என்று மக்கள் கோஷம் போட்டு இருக்கிறார்கள்.

அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம் கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலைப் பிடித்து கோர்ட் கட்டிடத்தின்மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம் கலையவில்லை.

பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள். அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு திருவாடானையை நோக்கி வந்தது. திருவாடானை வரும் வழியில் உள்ள