பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

75



நாங்கள் திடுக்கிட்டுத்திகைத்தோம். ‘ஆகா மோசம் போய் விட்டோம்’ என்று நினைத்துக் கொண்டோம். வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இனிமையான தமிழில், ‘தம்பி வீரபத்ரன் எல்லாம் சொன்னான். நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். இன்று இரவு நமது வீட்டில் தமிழ் நாட்டுச் சாப்பாடு சாப்பிடலாம் வாருங்கள்’ என்று கூப்பிட்டார்.

“அப்பாடா” என்று பெருமூச்சு விட்டோம். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயர் சுந்தர்சிங் என்றும், அவர் தந்தை மதுரையைச் சேர்ந்தவர் என்றும் காசியில் வியாபாரம் செய்ய வந்த குடும்பம் அங்கேயே தங்கி விட்டார்கன் என்றும் கந்தர்சிங் முழுப்பெயர் சோமசுந்தரம் என்றும் வடக்கே உத்யோகம் பார்க்க செளகரியமாக சுந்தர்சிங் என்று பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் ஒரு பஞ்சாபிப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் வீரபத்ரன்சொல்லத் தெரிந்து கொண்டோம்.

இன்ஸ்பெக்டர் வீட்டுக்குச் சென்றோம். அவரது பஞ்சாபி மனைவி தூய தமிழில் “வணக்கம்"என்றார். அப்போதே எங்களுக்கு “அங்கு தமிழ் நாட்டு சாப்பாடுதான்” என்று புரிந்த விட்டது. இரவு சாப்பாடு முடிந்தது. காலையிலும் பலகாரம் தந்தார்கள். இன்ஸ்பெக்டர், ஓட்டல் முதலாளி, வீரபத்திரன் மூவரும் சேர்ந்து ரூபாய் ஜநூறு கொடுத்து செலவிற்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். நாங்கள் புறப்பட வேண்டிய ரயில் ஏறினோம்.

அப்போது இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங்கின் மகன் ஐந்து வயதுப் பையன் வெளியூர் சென்றிருந்தவன் அங்கு வந்தான். அவன்தான் அவர் மகன் என்பதைத் தெரிந்து கொண்டு நான், “தம்பி உன் பெயர் என்ன?” என்றேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அவன் சொன்ன பதில் காந்தி என்பதாகும்.