இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
96
சொன்னால் நம்பமாட்டீர்கள்
கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத்
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்”
அவர் சொற்படி பின்னர் ‘சக்தி’ பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர. நிறைய வெளியிட்டார். அதன் பின்னர் கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் “சீனத்துச் சிங்காரி”
சொன்னால் நம்பமாட்டீர்கள் அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள் அவர் என்னை ஒரு “சிறுகதை மன்னன்” என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்.