பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 8

அரசாங்கக் கைதி இறுதியில் கல்லறைக் கைதியாகவே மாறுகிருன்.

ஆண்டவன் கைதி அவனுக்காகக் கண்ணிர் விடுகிருன். இந்தத் தத்துவ முப்பட்டைக்கண்ணுடி வழியில் தெறித்து விழுந்த வண்ணச் சிதறல், அண்ணுவில் புதைந்திருக்கின்ற ஆத்ருெழுக்கான பண்புகளை நமக்கு விளக்கிக் கொண்டிருக் கின்றன.

இப்போது அவர் ஆண்டவன் கைதி அரசாங்கக் கைதி களுக்காக வருந்திக் கொண்டிருக்கிரு.ர்.

காலத்தைப் பறக்கும் மீன் என்றுகூடக் கூறலாம். அது ஊழிக்கடலில் துள்ளியெழுந்து அங்கேயே மதுபடியும் விழுகிறது.

நிலத்திற்கு அது வருவதில்லை. அண்ணுவும் ஊழியில் தோன்றி அங்கேயே ஒடுங்கிர்ை. நிலத்திற்கு இனி திரும்பவே மாட்டார். நான் என் உடைகளைக் களைந்து எறிந்துவிட்டேன். நான் இப்போது நிர்வாணி:

உடையில் குற்றமிருந்தால் என் பொறுப்பு!

நிர்வாணத்தில் குற்றமிருந்தால் நித்தியன் பொறுப்பு. இது அண்ணுவின் கடைசி தத்துவ விளக்கம்.

தான் போட்டிருந்த உலகச் சட்டையை உறிந்து போட்டு விட்டார்.

அவருக்காகப் பாடிவந்த பறவைகள், ஆளில்லாத காரணத்தால் தத்தம் குஞ்சுகட்கே பாடுகின்றன.

அவருக்காகப் பூத்த மலர் யாருடைய கூந்தலுக்கோ செல்கிறது.

அவர் போன பாதையில் மாரிகால இருட்டு தவழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/19&oldid=564463" இலிருந்து மீள்விக்கப்பட்டது