பக்கம்:சொல்லோவியம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 யாரோடு மோதுவது என்ற நிலையில் சமூக நீதிபற்றிய விளக்கவுரைகளோடு கிளர்ச்சியை நிறுத்தி-சமூக நீதிக்காகப் போராடுபவர் யாராயிருப்பினும் அவர் கட்கு உதவி செய்வது என்ற அளவோடு இருந்து கொண்டோம். நமது முயற்சி கருகிவிட்டதாக யாரும் கருதவேண்டாம். - அப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல் களும் பொங்கி இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி! விந்தியமும், இமயமும் மோதிக்கொள்ளுகிற கிளர்ச்சி! சாவா ? வாழ்வா ? என்று முடிவுகட்டுகிற கிளர்ச்சி ! அந்தக் கிளர்ச்சியின் முடிவுதான் திராவிடநாடு திரா விடருக்கே என்று தென்னாட்டவரின் ஏகோபித்த குரல் எதிரொலிக்கும் காட்சியாக மாறப்போகிறது. கள், - ஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்பு கிறவரையில் நமக்கு வேறு பல வேலைகளுண்டு. சமூக நீதிகள் பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்யவேண்டும். மக்கள் விழிப்படைவார் ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. கொடுமையான காரணம் காரணந்தான் தெரியுமே பசி பருத்திக்கொட்டையைச் சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யு மளவுக்கு வளர்ந்துவிட்ட பசி - திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூ ரியத்தை, தாயார் விலை கூறி வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப்பசி இந்தப் பசி பசி - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/155&oldid=1703704" இலிருந்து மீள்விக்கப்பட்டது