இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பின் கால்களால் நின்று கொண்டு, முன்கால்களைத் தூக்கி அத்தி மரத்தில் வைத்தது ஆடு, கிளையை நோக்கித் தன் கழுத்தை நீட்டியது. எட்டவில்லை. கழுத்தை நீட்டி நீட்டிப் பார்த்தது. அப்போது, பாவம், அது தடுமாறிக் குளத்திற்குள் விழுந்து விட்டது.
“உதவி உதவி!!” என்று அது கதறியது.