பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் 95 (உரை - வாக்கு; கருத்து - எண்ணம்; பெருவிண்ணகர் - தேவர் உலகம்; பேறு - செல்வம்). என்ற பாசுரத்தை கருடன் சந்நிதிக்கு முன்னே நின்று ஓதி உளங் கரைகின்றோம். 'உன் விஷயத்தில் பயன்படுமாறு என் திரிகரணங்களையும் செய்தாயாதலால் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இனங்குவேனேயன்றிச் சில காலம் சிற்றின்ப அநுபவத்திற்கே உரிய உம்பருலகத்து இந்திர பதவியைத் தந்தருளினாலும் அதனைச் சிறிதும் பொருட் படுத்தேன்' என்கின்றார். இங்ங்னம் பரிபூரண பிரம்மாநுபவம் பெற்ற நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.