பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி பெரும்பாலும் பாசுரங்களின் முற்பகுதி எம்பெருமானைப் பற்றியும் பிற்பகுதி திருத்தலச் சூழல், திருத்தலச் சிறப்பு இவைபற்றியும் பேசுகின்றன. முதலாவதாக, திருத்தலத்தின் சூழ்நிலைப்பற்றி ஆழ்வார் பேசுவதைக் காண்போம். கரிய அழகிய வண்டுகள் தம் இனங்களுடன் மதுவினைப் பருகிப் பூக்களைக் கோதி அதன் பிறகு களிப்புக்குப் போக்குவீடாக இசைபாடப் பெற்ற சோலைகள் நிறைந்தது இத்திருத்தலம் (2); புதிது புதிதாக மலரும் பூக்களையுடைய சோலைகளில் பன்னிறத்தும்பிகள் திரிந்து கொண்டுள்ளன. வயல்கள் எப்போதும் கருவடைந்த பயிர்களால் நிறைந்திருப்பதால் அவை இரவு போல் இருண்ட காட்சியைத் தருகின்றன. (3); சிறந்த சிறகுகளையுடைய மயில்களும் குயில்களும் சோலைகளில் நெருங்கி வாழ்கின்றன; நறுமணம் மிக்க மலர்கள் எங்கும் சிந்தப் பெற்றுள்ளன; வண்டுகள் முரன்று இசை ஒலிகளை எழுப்புகின்றன. பரந்து வளர்ந்துள்ள மாமரங்கள் மணம் வீசி நிற்கின்றன (4), இங்குள்ள சோலைகளில் குயில்கள் மரக்கிளைகளினின்றும் குதித்துக் கூவும்; அவ்வொலிகளைக் கேட்டு மயில்கள் நடனமாடும் (5); அன்றியும், வாத்தியங்களின் மெல்லோசையை இவை மேக முழக்கமாகக் கருதியும் கூத்தாடும் (6): மாமுனிகள் அழகு மிக்க இசை நிறைந்த பாடல்களால் துதிசெய்வதையும் அந்த இசைக்குத் தக்கவாறு தாங்களே நர்த்தனங்களும் ஆடக் கண்ட தேவர்கள் இப்பூவூலகில் இத்திருப்பதியைப் போன்ற நகரம் எங்கும் இல்லை' என்று கொண்டாடி மலர்கள் தூவுகின்றனர் (7); நல்ல நீர்வாய்ப்பு அமைந்த இத்திருத்தலத்தில் நீர்ப்பெருக்கில் பலபல மணிகள் கொழிக்கப்பெற்று வரும்; அம்மணிகளின் ஒளி எங்கும் பரவி இத்திருத்தலம் இரவிலும் பகல்போல் காட்சி தரும்(8). இத்தகைய எழிலார்ந்த திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் - நாதன் - எப்படிப்பட்டவன்? நிலம் நீர் எரி கால் விசுப்பு என்று வழங்கப்பெறும் ஐம்பெரும்பூதங்களுக்கும் அந்தராத்மாவாக இருப்பவன்; எல்லாச் சேதநர்களின் எண்ணங்கட்கும் ஊக்கம் தருபவன்; கண்ணனாகத் திருவவதரித்த காலத்து தயிர் பால் நெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டவன்; அக் குற்றத்திற்காக யசோதைப் பிராட்டியால் கட்டுண்டவன்; குடக்கூத்தாடிய பெருமான் (1) ; பாலனாய் உலகேழும் தனது திருமேனியளவில்