பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளம் பூதங்குடிப் புனிதன் 137 என்பது பாசுரம். திருப்புள்ளம் பூதங்குடி என்னும் திருப்பதியை அடைந்தவுடன் அதன் மகிமையால் இம்மையில் விரும்பும் எல்லாப் பலன்களும் கிட்டி, வினையனைத்தும் தீரும்; மறுமையில் வீடு பேறும் கிடைக்கும் என்கின்றார் அய்யங்கார். இத்திருத்தலத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தொண்டரடிப் பொடியாழ்வார் திருவதரித்த மண்டங்குடி என்ற ஊர் உள்ளது. இத்திருத்தலப் பயணத்தில் மிகவும் மன நிறைவு பெற்று நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 5. நூற். திரு. அந். 7