பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே' (கொண்டல் - மேகம்; வண்ணன் - நிறத்தன், அண்டர் கோன் - நித்திய சூரிகட்குத் தலைவன்) என்று முத்தாய்ப்பாகக் கூறுவர். சூடிக்கொடுத்த சுடர்க் கொடி அழகிய மணவாளரை, 'என் அரங்கத்து இன்னமுதர், குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர், கொப்பூழில் எழு கமலப்பூ அழகர்' என்று பேசி அவன் அழகில் ஆழங்கால்படுவர். மணக்கால் நம்பிகள் - அழகிய மணவாளனைக் காட்டிஆளவந்தாரைப் பக்தி நெறிக்குத் திருப்பின வரலாறும் உண்டு. உறங்கா வில்லியையும் பொன்னாச்சியாரையும் அழகிய மணவாளரின் எழிலுருவத்தைக் காட்டி அவர்களை விஷயகாமத்தினின்றும் பகவத்காமத்திற்குக் கொண்டுசெலுத்திய பெருமையை எம்பெருமானார் பெறுகின்றார். நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை அழகரின் திருமேனி அழகில் ஈடுபட்ட திறம் தனிச் சிறப்பு வாய்ந்தது. கற்பகத்தரு கப்பும் கிளையுமாகப் பனைத்துப் பூத்தாற் போலே நிற்கின்றான் எம்பெருமான். அவனது அழகுவெள்ளம் அலைமோதி ஆழ்வார்மீது பாய்கின்றது. எம்பெருமானை நோக்கி வினவுகின்றார் முடிச்சோதி யாய்உனது முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே.' (முடி - தலை; அடி- திருவடி, படிசோதி - இயற்கையான காந்தி கடி - திருவரை) என்ற திருப்பாசுரத்தில். 'நின் திருமுக மண்லத்தின் காந்தி மேல் முகமாகக் கிளர்ந்து கிரீடச் சோதியாக ஆயிற்றா? நின் 5. அமலனாதி பிரான்-10 6. நாச். திரு. 1.1.2. 7. திருவாய் 3.1.1.